மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான நீண்ட கால சட்டப் போராட்டத்தில், ஒரு முக்கிய கட்டமாக நாளை (செவ்வாய்க்கிழமை) மதுரை உயர்நீதிமன்ற அமர்வு தனது இறுதித் தீர்ப்பை வழங்க உள்ளது. இந்தத் தகவல் ஆன்மீக அன்பர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள ஒரு குறிப்பிட்ட தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு கருத்து வேறுபாடுகளும் சட்டச் சிக்கல்களும் நிலவி வருகின்றன. இந்நிலையில் 2025ம் ஆண்டில் கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதற்கு அனுமதி கேட்டு ராம ரவிக்குமார் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்தார்.

ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்து, 144 தடை உத்தரவு போட்டதால் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றப்படவில்லை. மேலும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், தீபம் ஏற்றும் இடம் தர்காவுக்கு அருகில் இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. நீதிபதியின் உத்தரவை அமல்படுத்தாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டன. ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு அறிவிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநான் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை நாளை தீர்ப்பு அளிக்கிறது. நீதிபதிகள் கே.கே.ராமகிருஷ்ணன், ஜெயச்சந்திரன் அமர்வு நாளை தீர்ப்பு அளிக்க உள்ளது
காங்கிரஸால் காயப்பட்டுள்ளோம்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.. திமுக
ரோஜா பூ கொடுத்து புதிய மாணவர்களை அன்புடன் வரவேற்ற தேவகோட்டை ஆசிரியர்கள்!
புதிய கல்வியாண்டு.. அனைவரும் இணைந்து அறிவுச் சுடரை உயர்த்திப் பிடிப்போம்!
Tamil Life Qoutes: தெரிந்து கொள்வதை விட புரிந்து கொண்டால் .. அன்பு ஆயுள் வரை நீடிக்கும்.!
மாணவர் நலனைக் காப்பாற்றுங்கள்.. அமைச்சரிடம் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை
Vipuvana sangadahara chaturthi: விபுவன சங்கடஹர சதுர்த்தி.. விரதம் இருந்து விநாயகனை வழிபடுவோம்
லீவு முடிஞ்சாச்சு.. பள்ளிக்கூடம் திறந்தாச்சு.. உற்சாகமாக திரண்டு வந்த மாணவ, மாணவியர்!
Om Sai.. அன்பே சாய்!
Remembering SPB: S. P. பாலசுப்ரமணியம் .. ஒரு தெய்வீக ஆன்மா!
{{comments.comment}}