- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி மாதம் திங்கள்கிழமை, டிசம்பர் 16ம் தேதி பிறக்கிறது. மார்கழி என்றதுமே திருப்பாவை தான் நமது நினைவுக்கு வரும். ஆண்டாள் அருளிய திருப்பாவை, கண்ணன் மீது பாடப்பட்ட பாசுரங்களின் தொகுப்பாகும். மார்கழி மாதம் முழுவதும் பாடப்படும் திருப்பாவை பாசுரங்களை தினசரி ஒன்றாகக் காணலாம்.
திருப்பாவை பாடல் 1 :
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் பஙாதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல்கொடுந் தொழிலன் நந்தகோபன் குமாரன்
ஏரார்ந்த கன்னியசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் பத்ந்தேலோ ரெம்பாவாய்

பொருள் :
பெருமாளுக்கு உகந்த மாதம் மார்கழி மாதம். இது முழுநிலவு ஒளிவீசும் நன்னாள் இது. அணிகலன்கள் அணிந்த கன்னியரே, ஆயர்பாடியில் வசிக்கும் செல்வமிக்க சிறுமியர்களே! இன்று நாம் நீராட கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மை பாதுகாத்து வரும் நந்தகோபர், அழகிய விழியுடைய யசோதா தேவியின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல பிரகாசமான முகத்தை உடையவனும், நாராயணனின் அம்சமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கின்றான். அவரைப் பாடி புகழ்ந்தால், நம்மை இந்த உலகமே வாழ்த்தும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Legacy of Captain Vijayakanth: விஜயகாந்த் மட்டும் அந்த முடிவை அன்று எடுக்காமல் இருந்திருந்தால்?
2010க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்கு:தீர்மானம் நிறைவேற்றம்!
" கனிமவள கொள்ளைக்கு Fine போடுவார், கைது செய்வார்!" – ஆதவ் அர்ஜூனா அதிரடி பேச்சு
NLC இனி நமக்கு தேவையில்லை: சட்டசபையில் சௌமியா அன்புமணி ஆவேச பேச்சு!
தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: CIDக்கு வழக்கு மாற்றம்
தமிழகத்திற்கு 9000 கனஅடி நீர் திறக்க வேண்டும்...காவிரி ஆணையம் உத்தரவு
Sudha's US Diary.. கலிபோர்னியா வந்தாச்சா.. எடு காரை.. விடு ஜூட்!
பரந்தூர் விமான நிலையத்திட்டம்...சட்டசபையில் நடந்த காரசார விவாதம்
{{comments.comment}}