- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி மாதம் திங்கள்கிழமை, டிசம்பர் 16ம் தேதி பிறக்கிறது. மார்கழி என்றதுமே திருப்பாவை தான் நமது நினைவுக்கு வரும். ஆண்டாள் அருளிய திருப்பாவை, கண்ணன் மீது பாடப்பட்ட பாசுரங்களின் தொகுப்பாகும். மார்கழி மாதம் முழுவதும் பாடப்படும் திருப்பாவை பாசுரங்களை தினசரி ஒன்றாகக் காணலாம்.
திருப்பாவை பாடல் 1 :
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் பஙாதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல்கொடுந் தொழிலன் நந்தகோபன் குமாரன்
ஏரார்ந்த கன்னியசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் பத்ந்தேலோ ரெம்பாவாய்

பொருள் :
பெருமாளுக்கு உகந்த மாதம் மார்கழி மாதம். இது முழுநிலவு ஒளிவீசும் நன்னாள் இது. அணிகலன்கள் அணிந்த கன்னியரே, ஆயர்பாடியில் வசிக்கும் செல்வமிக்க சிறுமியர்களே! இன்று நாம் நீராட கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மை பாதுகாத்து வரும் நந்தகோபர், அழகிய விழியுடைய யசோதா தேவியின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல பிரகாசமான முகத்தை உடையவனும், நாராயணனின் அம்சமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கின்றான். அவரைப் பாடி புகழ்ந்தால், நம்மை இந்த உலகமே வாழ்த்தும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் நடப்பது அன்பு சாம்ராஜ்யம் - அமைச்சர் அருண்ராஜ் புகழாரம்
Ratha yatra when god becomes human.. பூரி ரத யாத்திரையின் மகிமை!
Monday Motivation: ஆழ்கடலின் மோனத்தால் அறிவுநிலை கடந்த ஞானி.. கடல்!
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
கரிசல் மண்ணின் மைந்தன்.. எளிய மக்களின் எழுத்தாளர் பூமணி காலமானார்
சென்னை மாணவர்களுக்கு குட் நியூஸ்: இன்று முதல் 42 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
ஐவகை நிலங்களின் பெயரில்.. மாணவர் தலைவர், அமைச்சரைத் தேர்வு செய்யும்.. மகிழ் முற்றம்
எழுத்து சொற்களின் தொகுப்பல்ல.. மனித வாழ்வை மாற்றும் சக்தி.. எழுத்துச் சித்தர் பாலகுமாரன்!
இசையரசி ஜானகி.. நிலவை மேகம் மறைக்கலாம்.. நெஞ்சில் என்றுமே ஒளிவீசும்!
{{comments.comment}}