மார்கழி 1 - ஆண்டாள் அருளிய திருப்பாவை.. பாடல் 1.. மார்கழித் திங்கள்..!

Dec 15, 2024,08:10 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மார்கழி மாதம் திங்கள்கிழமை, டிசம்பர் 16ம் தேதி பிறக்கிறது. மார்கழி என்றதுமே திருப்பாவை தான் நமது நினைவுக்கு வரும். ஆண்டாள் அருளிய திருப்பாவை, கண்ணன் மீது பாடப்பட்ட பாசுரங்களின் தொகுப்பாகும்.  மார்கழி மாதம் முழுவதும் பாடப்படும் திருப்பாவை பாசுரங்களை தினசரி ஒன்றாகக் காணலாம். 


திருப்பாவை பாடல் 1 :


மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்

நீராடப் பஙாதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்

கூர்வேல்கொடுந் தொழிலன் நந்தகோபன் குமாரன்

ஏரார்ந்த கன்னியசோதை இளஞ்சிங்கம்

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழப் பத்ந்தேலோ ரெம்பாவாய்




பொருள் :


பெருமாளுக்கு உகந்த மாதம் மார்கழி மாதம். இது முழுநிலவு ஒளிவீசும் நன்னாள் இது. அணிகலன்கள் அணிந்த கன்னியரே, ஆயர்பாடியில் வசிக்கும் செல்வமிக்க சிறுமியர்களே! இன்று நாம் நீராட கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மை பாதுகாத்து வரும் நந்தகோபர், அழகிய விழியுடைய யசோதா தேவியின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல பிரகாசமான முகத்தை உடையவனும், நாராயணனின் அம்சமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கின்றான். அவரைப் பாடி புகழ்ந்தால், நம்மை இந்த உலகமே வாழ்த்தும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Gpay Pocket Money: ஜிபே அறிமுகப்படுத்தியுள்ள பாக்கெட் மணி.. இது ஸ்கேம் அல்ல.. சூப்பரான ஸ்கீம்!

news

Sa No to Drugs: போதைக்கு நோ செல்லுங்க... இளைஞர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அட்வைஸ்

news

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவுகளுக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை

news

மற்றவர்களுக்கு இது தேர்தல், நமக்கு இது எமோஷன் - நெல்லையில் அனல் பறக்கப் பேசிய விஜய்

news

Rathi's Kitchen: மறைந்தும் மறந்தும் போன பாரம்பரிய சத்தான சிறுபயறு குழம்பு.....!

news

பழ மொழிகள்.. பெண்ணின் வாழ்வு என்பது கணவனின் அன்பே!

news

இவள்‌ தானே நம் தேவதை!

news

உச்சத்தின் எச்சம்!

news

நெல்லை, தூத்துக்குடியில் விஜய் ரோடுஷோ... தொண்டர்களால் தொடரும் விபத்துக்களால் பரபரப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்