- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 10 ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் 10.. நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
திருப்பாவை பாசுரம் 10 :
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுடொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
பொருள் :
முந்தைய பிறவியில் எம்பெருமானாகிய நாராயணனை வேண்டி நோன்பு இருந்ததன் பயனாக இப்போது சொர்க்கம் போன்ற சுகத்தை அனுபவித்து தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணே!் உன்னுடைய வீட்டின் கதவை திறக்கா விட்டாலும் பரவாயில்லை. பேச கூட மாட்டாயா? நறுமனம் மிக்க துளசியையும், மலர்களையும் சூடிக் கொண்டிருக்கும் நாராயணனை நாம் போற்றி பாடி, நோன்பு இருந்தால் அதற்குரிய பலனை அவன் உடனடியாக தருவான்.
முந்தைய காலத்தில் தூக்கத்திற்கு உதாரணமாக கும்பகர்ணனை சொல்வார்கள். ஆனால் உன்னுடைய தூக்கத்தை பார்த்து, அவனே உன்னிடம் தோற்று, உன்னுடன் தன்னால் தூக்கத்தில் போட்டி போட முடியாது என எண்ணி, தன்னுடைய தூக்கம் மொத்தத்தையும் உனக்கு அளித்து விட்டானோ!சோம்பலுக்கு உதாரணமாக இருப்பவளே! கிடைப்பதற்கு அரிதான அணிகலன்களை அணிந்தவளே தடுமாற்றம் இல்லாமல் வந்து கதவை திறந்து வெளியே வா.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
10th பொதுத்தேர்வில்.. அதிக தேர்ச்சி விகிதத்தில்.. சிவகங்கை முதலிடத்தை பிடித்து சாதனை..!
11ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளும் வெளியானது.. தேர்ச்சி விகிதம் மொத்தம் 92.09% !
தமிழ்நாட்டில்.. மே மாத இறுதியில் கோடை வெயில்.. இயல்பை விட குறையும்.. தமிழ்நாடு வெதர்மேன்!
தமிழகத்தில் 10வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.. வழக்கம் போல மாணவியரே அதிகம் பாஸ்!
பொள்ளாச்சி வழக்கில்.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க.. முதல்வர் உத்தரவு..!
என் குழந்தைகள் என் உயிர்.. என்னிடமிருந்து பிரிக்க முயன்றார்கள்.. நடிகர் ரவி மோகன் பரபரப்பு அறிக்கை
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 52 சதவீதம் குற்றங்கள் அதிகரிப்பு..பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்ய வேண்டாம்...ஆப்பிள் சிஇஓ.,க்கு டிரம்ப் உத்தரவு
cyclone shakthi பெங்களூருக்கு ஆரஞ்சு அலர்ட்...புயல் காற்றுடன் மழை வெளுக்க போகுதாம்
{{comments.comment}}