- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 10 ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் 10.. நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
திருப்பாவை பாசுரம் 10 :
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுடொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

பொருள் :
முந்தைய பிறவியில் எம்பெருமானாகிய நாராயணனை வேண்டி நோன்பு இருந்ததன் பயனாக இப்போது சொர்க்கம் போன்ற சுகத்தை அனுபவித்து தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணே!் உன்னுடைய வீட்டின் கதவை திறக்கா விட்டாலும் பரவாயில்லை. பேச கூட மாட்டாயா? நறுமனம் மிக்க துளசியையும், மலர்களையும் சூடிக் கொண்டிருக்கும் நாராயணனை நாம் போற்றி பாடி, நோன்பு இருந்தால் அதற்குரிய பலனை அவன் உடனடியாக தருவான்.
முந்தைய காலத்தில் தூக்கத்திற்கு உதாரணமாக கும்பகர்ணனை சொல்வார்கள். ஆனால் உன்னுடைய தூக்கத்தை பார்த்து, அவனே உன்னிடம் தோற்று, உன்னுடன் தன்னால் தூக்கத்தில் போட்டி போட முடியாது என எண்ணி, தன்னுடைய தூக்கம் மொத்தத்தையும் உனக்கு அளித்து விட்டானோ!சோம்பலுக்கு உதாரணமாக இருப்பவளே! கிடைப்பதற்கு அரிதான அணிகலன்களை அணிந்தவளே தடுமாற்றம் இல்லாமல் வந்து கதவை திறந்து வெளியே வா.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}