- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 16 ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 16 - நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
திருப்பாவை பாசுரம் 16 :
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.

பொருள் :
எங்களுடைய தலைவனாக இருக்கும் நந்தகோபனின் மாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ள வாசலில் நின்று காவல் புரிபவனே!ஆயர்பாடி குலத்தில் பிறந்த சிறுமிகளான எங்களுக்கு இந்த மாளிகையின் கதவை திறந்து, உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும். மாயச் செயல்கள் பல செய்பவனும், கருமையான நிறமுடையவனுமான கண்ணன் எங்களுக்கு சிறு பறையை தருவதாக நேற்று சொல்லி இருந்தான். அதுனை பெற்றுச் செல்ல நாங்கள் நீராடி, தூய்மையாக வந்துள்ளோம். அவனை துயில் எழுப்புமண பாடல்களையும் பாட வந்துள்ளோம். முடியாது என உன்னுடைய வாயால் ஆரம்பத்திலேயே சொல்லி எங்களை திருப்பி அனுப்பி விடாதே. மூடி உள்ள இந்த கதவை திறந்து கண்ணனை நாங்கள் தரிசிக்க அனுமதி அளிக்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விஜய் படைத்த புதிய சாதனை: தமிழ்நாட்டின் முதல் கூட்டணி அரசு.. நீண்ட கால கனவு நனவானது!
முதல்வர் விஜய் சர்க்கார்.. இளைஞர்கள் நிரம்பிய அமைச்சரவை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு இடம்?
புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு.. செங்கோட்டையன் இலாகா மாற்றம்
அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.க்கள் நிலை.. அடுத்து என்ன செய்ய போகிறார்கள்?
தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: 19 மாவட்டங்களில் அமைச்சர்கள் இல்லை
அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்களுக்கு தமிழக அமைச்சரவையில் இடமில்லை!
விஜய் அமைச்சரவை: 23 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு.. 3 பெண்களுக்கு இடம்!
சிந்தனைச் சிதறல்.. வாய்ப்புகளுக்காக காத்திருங்கள்.. கிடைத்தால் விடாதீர்கள்
மனிதனின் இரு பக்கங்கள்: பலமும் பலவீனமும்
{{comments.comment}}