மார்கழி 16 ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 16 - நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய

Dec 30, 2024,04:45 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மார்கழி 16 ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 16 - நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய


திருப்பாவை பாசுரம் 16 :


நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய

கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண

வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்

ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்

தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்

வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ

நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.




பொருள் :


எங்களுடைய தலைவனாக இருக்கும் நந்தகோபனின் மாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ள வாசலில் நின்று காவல் புரிபவனே!ஆயர்பாடி  குலத்தில் பிறந்த சிறுமிகளான எங்களுக்கு இந்த மாளிகையின் கதவை திறந்து, உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும். மாயச் செயல்கள் பல செய்பவனும், கருமையான நிறமுடையவனுமான கண்ணன் எங்களுக்கு சிறு பறையை தருவதாக நேற்று சொல்லி இருந்தான். அதுனை பெற்றுச் செல்ல நாங்கள் நீராடி, தூய்மையாக வந்துள்ளோம். அவனை துயில் எழுப்புமண பாடல்களையும் பாட வந்துள்ளோம். முடியாது என உன்னுடைய வாயால் ஆரம்பத்திலேயே சொல்லி எங்களை திருப்பி அனுப்பி விடாதே. மூடி உள்ள இந்த கதவை திறந்து கண்ணனை நாங்கள் தரிசிக்க அனுமதி அளிக்க வேண்டும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

ஜனநாயகக் கடமையாற்ற வேண்டிய நாள்.. உங்கள் வாக்கை தவறாமல் பதிவு செய்யுங்கள்!

news

யாசகத்தோழி!

news

வெளியில் புன்னகைத்து.. உள்ளுக்குள் கனன்றுகொண்டிருக்கும்.. நெருப்புக் குழம்பிற்குச் சொந்தக்காரி!

news

பஹல்காம் பரிதாபம்.. சிந்தூரைப் பார்த்து சினம் கொண்டவனை சிந்தூர் சாய்த்தது!

news

சிந்தனைச் சிதறல்.. ஒருவருக்கு தவறெனத் தோன்றுவது மற்றவருக்கு சரியெனத் தோன்றுகிறது!

news

Fermented rice: பழைய சோறு.. வெயில் வந்தாலே.. இதுவும் நம்மை நாடி வந்து விடும்!

news

Housewives எல்லாம் சும்மா இல்லைங்க.. அவர்கள் பாராட்டப்படாத உழைப்பாளிகள்!

news

Deepa Ravi Poem: உன் அருகில் நான் அமர்ந்தால்.. என் மனமோ!

news

World Earth Day: உயிர்க்கோளம் பூமி .. இறைவன் நமக்கு கொடுத்த வரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்