- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 16 ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 16 - நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
திருப்பாவை பாசுரம் 16 :
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.
பொருள் :
எங்களுடைய தலைவனாக இருக்கும் நந்தகோபனின் மாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ள வாசலில் நின்று காவல் புரிபவனே!ஆயர்பாடி குலத்தில் பிறந்த சிறுமிகளான எங்களுக்கு இந்த மாளிகையின் கதவை திறந்து, உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும். மாயச் செயல்கள் பல செய்பவனும், கருமையான நிறமுடையவனுமான கண்ணன் எங்களுக்கு சிறு பறையை தருவதாக நேற்று சொல்லி இருந்தான். அதுனை பெற்றுச் செல்ல நாங்கள் நீராடி, தூய்மையாக வந்துள்ளோம். அவனை துயில் எழுப்புமண பாடல்களையும் பாட வந்துள்ளோம். முடியாது என உன்னுடைய வாயால் ஆரம்பத்திலேயே சொல்லி எங்களை திருப்பி அனுப்பி விடாதே. மூடி உள்ள இந்த கதவை திறந்து கண்ணனை நாங்கள் தரிசிக்க அனுமதி அளிக்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}