மார்கழி 16 ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 16 - நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய

Dec 30, 2024,04:45 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மார்கழி 16 ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 16 - நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய


திருப்பாவை பாசுரம் 16 :


நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய

கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண

வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்

ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்

தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்

வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ

நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.




பொருள் :


எங்களுடைய தலைவனாக இருக்கும் நந்தகோபனின் மாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ள வாசலில் நின்று காவல் புரிபவனே!ஆயர்பாடி  குலத்தில் பிறந்த சிறுமிகளான எங்களுக்கு இந்த மாளிகையின் கதவை திறந்து, உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும். மாயச் செயல்கள் பல செய்பவனும், கருமையான நிறமுடையவனுமான கண்ணன் எங்களுக்கு சிறு பறையை தருவதாக நேற்று சொல்லி இருந்தான். அதுனை பெற்றுச் செல்ல நாங்கள் நீராடி, தூய்மையாக வந்துள்ளோம். அவனை துயில் எழுப்புமண பாடல்களையும் பாட வந்துள்ளோம். முடியாது என உன்னுடைய வாயால் ஆரம்பத்திலேயே சொல்லி எங்களை திருப்பி அனுப்பி விடாதே. மூடி உள்ள இந்த கதவை திறந்து கண்ணனை நாங்கள் தரிசிக்க அனுமதி அளிக்க வேண்டும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்