மார்கழி 2 - ஆண்டாள் அருளிய திருப்பாவை.. பாடல் 2.. வையத்து வாழ்வீர்காள்!

Dec 16, 2024,04:49 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருப்பாவை பாசுரம் 2 :




வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பையத்துயின்ற பரமன் அடிபாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்கலே நீராடி

மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்

செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.


பொருள் :


பூமியில் வாழ்பவர்களே! நம்முடைய பாவை நோன்புக்கு செய்ய வேண்டிய காரியங்களைக் கேளுங்கள். பாற்கடலில் துயில் கொள்கின்ற பரந்தாமனுடைய திருவடிகளைப் பற்றி பாடுவோம். நெய், பால் போன்றவை உட்கொளள்ள மாட்டோம். விடியற்காலையில் குளித்து விட்டு, கண்ணில் மை தீட்டி அழகுபடுத்திக் கொள்ள மாட்டோம். கூந்தலில் மலர்கள் சூடிக் கொள்ள மாட்டோம். தீய சொற்களை மனதால் நினைக்க மாட்டோம். செய்யக் கூடாத தீய, பாவ செயல்களை செய்ய மாட்டோம். பிறரை பற்றி புறம் பேச மாட்டோம். இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் போதும் என்று அவர்கள் கூறும் அளவிற்கு தர்மங்கள் செய்திடுவோம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

48 மணி நேரததிற்குள் தாக்குதல்.. டிரம்ப்பின் மிரட்டல் முட்டாள்தனமானது.. ஈரான் கடும் காட்டம்

news

US rescue OP: அமெரிக்க வீரரை ஈரானிலிருந்து மீட்டு விட்டோம்.. அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

Sripriya Short stories: பசிக்க விடு, பலமாக வளரும்!

news

ஈஸ்டர் திருநாள்.. உயிர்த்தெழுந்த நாயகன்!

news

சிலுவையை மீட்பின் அடையாளமாக்கியவரே!

news

உயிர்த்தெழுந்த நம்பிக்கை – ஈஸ்டர் திருநாளின் அழகான கதை

news

தேர்தலில் போட்டியிடாதது ஏன்?.. இதுதாங்கண்ணா காரணம்.. வேற ஒன்னும் இல்லை.. அண்ணாமலை விளக்கம்

news

புதுச்சேரியில் ரோடுஷோ...ரசிகர்களின் அல்ட்ராசிட்டியால் பதறி போன விஜய்

news

தமிழகத்தில் ஏப்ரல் 7 வரை மழைக்கு வாய்ப்பு...சென்னைக்கு மட்டும் கிடையாதாம்

அதிகம் பார்க்கும் செய்திகள்