- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 2 :
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்கலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
பொருள் :
பூமியில் வாழ்பவர்களே! நம்முடைய பாவை நோன்புக்கு செய்ய வேண்டிய காரியங்களைக் கேளுங்கள். பாற்கடலில் துயில் கொள்கின்ற பரந்தாமனுடைய திருவடிகளைப் பற்றி பாடுவோம். நெய், பால் போன்றவை உட்கொளள்ள மாட்டோம். விடியற்காலையில் குளித்து விட்டு, கண்ணில் மை தீட்டி அழகுபடுத்திக் கொள்ள மாட்டோம். கூந்தலில் மலர்கள் சூடிக் கொள்ள மாட்டோம். தீய சொற்களை மனதால் நினைக்க மாட்டோம். செய்யக் கூடாத தீய, பாவ செயல்களை செய்ய மாட்டோம். பிறரை பற்றி புறம் பேச மாட்டோம். இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் போதும் என்று அவர்கள் கூறும் அளவிற்கு தர்மங்கள் செய்திடுவோம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}