மார்கழி 3 - ஆண்டாள் அருளிய திருப்பாவை.. பாடல் 3.. ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி!

Dec 17, 2024,05:07 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருப்பாவை பாசுரம் 03 :


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.




பொருள் :


மூன்று உலகங்களையும் தன்னுடைய திருவடிகளால் அளந்து, திரிவிக்கிரமனாக காட்சி தந்த எப்பெருமாளின் நாமங்களை இந்த மார்கழி மாதத்தில் பாடி பாவை நோம்பு கடைபிடித்தால், நாடு முழுவதும் எந்த குறையும் இல்லாதம் மாதம் மூன்று முறை மழை பெய்யும். அதனால் செந்நெல் வளர, அந்த வயல் நடுவே மீன்கள் துள்ளி விளையாடும். அழகிய நெய்தல் பூக்களில் வண்டுகள் தேன் எடுக்க தேடி வரும். அத்தகைய செழிப்பில், பசுக்கல் வள்ளலை போல் குடம் குடமாக பாலை தருகின்றன. பெருமாளை போற்றி பாடிக் கொண்டே இருந்தால் இது போன்ற பல நன்மைகளை பெற்று, குறைவின்றி செல்வங்களை பெற்று, நிறைவாக வாழலாம்.


---


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்கள்...காலியான 7 தொகுதிகள்

news

அரசு வேலை மோசடி : திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!

news

அதிமுகவிற்கு மீண்டும் அதிர்ச்சி... எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா.. காலியிடம் 7 ஆனது

news

கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்? கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டம்!

news

ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கான ரூ.2 தள்ளுபடி ரத்து!

news

ஆனி மாதம் வரும்.. ஜேஷ்ட பெளர்ணமி திதி.. நாளை காலை 6.11 வரை இருக்கு!

news

விழுப்புரத்தில் நடந்த திருக்குறள் திருவிழா.. சென்னை ஆசிரியை கோ.லதாவுக்கு விருது

news

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவல பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

news

"சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை" – நற்பணி இயக்கம் விளக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்