மார்கழி 3 - ஆண்டாள் அருளிய திருப்பாவை.. பாடல் 3.. ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி!

Dec 17, 2024,05:07 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருப்பாவை பாசுரம் 03 :


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.




பொருள் :


மூன்று உலகங்களையும் தன்னுடைய திருவடிகளால் அளந்து, திரிவிக்கிரமனாக காட்சி தந்த எப்பெருமாளின் நாமங்களை இந்த மார்கழி மாதத்தில் பாடி பாவை நோம்பு கடைபிடித்தால், நாடு முழுவதும் எந்த குறையும் இல்லாதம் மாதம் மூன்று முறை மழை பெய்யும். அதனால் செந்நெல் வளர, அந்த வயல் நடுவே மீன்கள் துள்ளி விளையாடும். அழகிய நெய்தல் பூக்களில் வண்டுகள் தேன் எடுக்க தேடி வரும். அத்தகைய செழிப்பில், பசுக்கல் வள்ளலை போல் குடம் குடமாக பாலை தருகின்றன. பெருமாளை போற்றி பாடிக் கொண்டே இருந்தால் இது போன்ற பல நன்மைகளை பெற்று, குறைவின்றி செல்வங்களை பெற்று, நிறைவாக வாழலாம்.


---


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வாக்காளர்கள் கவனத்திற்கு...ஓட்டு போடுவது எப்படி?

news

திமுக, அதிமுக இரண்டுமே பாஜக.,வின் அடிமை...கடைசி நாள் பிரச்சாரத்தில் விளாசிய விஜய்

news

கடைசி நாள் பிரச்சாரம்...கூடுதல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி

news

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலை வேண்டாம்...இது இருந்தால் ஓட்டு போடலாம்

news

Agni natchatiram: அக்னி நட்சத்திரம் 2026 .. வெளுக்கெடுக்க ஆரம்பிக்கும் வெயில்.. சம்மர் டிப்ஸ்!

news

வயதாகி விட்டது என்று சொல்லாதீர்கள்.. Do not say you have grown old!

news

சாதிக்கத் துடிச்சா.. என்றுமே இளமைதான்.. If you have goals to achieve you are still young !

news

எங்கெல்லாம் பாராட்டப்படவில்லையோ.. அங்கெல்லாம் you should be unavoidable too!

news

The 8:10 Rickshaw.. ஒத்திப் போ ஒத்திப் போ.. கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ!

அதிகம் பார்க்கும் செய்திகள்