மார்கழி 3 - ஆண்டாள் அருளிய திருப்பாவை.. பாடல் 3.. ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி!

Dec 17, 2024,05:07 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருப்பாவை பாசுரம் 03 :


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.




பொருள் :


மூன்று உலகங்களையும் தன்னுடைய திருவடிகளால் அளந்து, திரிவிக்கிரமனாக காட்சி தந்த எப்பெருமாளின் நாமங்களை இந்த மார்கழி மாதத்தில் பாடி பாவை நோம்பு கடைபிடித்தால், நாடு முழுவதும் எந்த குறையும் இல்லாதம் மாதம் மூன்று முறை மழை பெய்யும். அதனால் செந்நெல் வளர, அந்த வயல் நடுவே மீன்கள் துள்ளி விளையாடும். அழகிய நெய்தல் பூக்களில் வண்டுகள் தேன் எடுக்க தேடி வரும். அத்தகைய செழிப்பில், பசுக்கல் வள்ளலை போல் குடம் குடமாக பாலை தருகின்றன. பெருமாளை போற்றி பாடிக் கொண்டே இருந்தால் இது போன்ற பல நன்மைகளை பெற்று, குறைவின்றி செல்வங்களை பெற்று, நிறைவாக வாழலாம்.


---


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சினிமாவை அரசியலாகப் பார்க்காதீர்கள்: தணிக்கைக் குழுவிற்கு வைரமுத்து கோரிக்கை!

news

தவெக தேர்தல் பிரச்சாரக்குழு அறிவிப்பு...10 பேர் பட்டியலில் செங்கோட்டையன்

news

பாஜக பொதுக்கூட்ட பேனரில் டிடிவி தினகரன் படம் ...கூட்டணி தகவல் உண்மை தானா?

news

பாலமேடு ஜல்லிக்கட்டு: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காளை சிலையை பரிசளித்த நடிகர் சூரி!

news

மாட்டுப் பொங்கலோடு திருவள்ளுவர் தினத்தையும் சேர்த்துக் கொண்டாடுவோம்!

news

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு தங்கம் விலை இன்று சற்று குறைவு

news

அடி ஆத்தாடி.. மனதைக் கொள்ளை கொண்ட ஜெனீபர் டீச்சர் .. A rewind!

news

சூர்யா முதல் தனுஷ் வரை...டாப் ஹீரோக்கள் படங்களின் டிஜிட்டல் உரிமையை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்

news

தை மகள் பிறந்தாள்

அதிகம் பார்க்கும் செய்திகள்