- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 03 :
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

பொருள் :
மூன்று உலகங்களையும் தன்னுடைய திருவடிகளால் அளந்து, திரிவிக்கிரமனாக காட்சி தந்த எப்பெருமாளின் நாமங்களை இந்த மார்கழி மாதத்தில் பாடி பாவை நோம்பு கடைபிடித்தால், நாடு முழுவதும் எந்த குறையும் இல்லாதம் மாதம் மூன்று முறை மழை பெய்யும். அதனால் செந்நெல் வளர, அந்த வயல் நடுவே மீன்கள் துள்ளி விளையாடும். அழகிய நெய்தல் பூக்களில் வண்டுகள் தேன் எடுக்க தேடி வரும். அத்தகைய செழிப்பில், பசுக்கல் வள்ளலை போல் குடம் குடமாக பாலை தருகின்றன. பெருமாளை போற்றி பாடிக் கொண்டே இருந்தால் இது போன்ற பல நன்மைகளை பெற்று, குறைவின்றி செல்வங்களை பெற்று, நிறைவாக வாழலாம்.
---
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மழைக்கால கூட்டத்தொடரில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா கொண்டு வர திட்டம்
மீனவர்களின் கண்ணீர் பயணம்!
ஆடி மாதம் வந்தாச்சு.. அம்மன் அருளும் தந்தாச்சு.. ஆடி மாத சிறப்புகள்!
பேராசிரியர் அய்க்கண்- வசந்தா நினைவு சிறுகதை போட்டி.. இரா. கலைச்செல்விக்கு முதல் பரிசு
Santhi Sinnathambi poem: வழிமேல் விழி வைத்து!
Miss உங்களுக்குத் தான் பூ கொண்டு வந்திருக்கேன்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
ஓர் இரும்பு கூழானது!
Short Story: கன்னிகாஸ்திரி !
Tamil Poem: பணமும் மனிதமும்!
{{comments.comment}}