மார்கழி 3 - ஆண்டாள் அருளிய திருப்பாவை.. பாடல் 3.. ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி!

Dec 17, 2024,05:07 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருப்பாவை பாசுரம் 03 :


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.




பொருள் :


மூன்று உலகங்களையும் தன்னுடைய திருவடிகளால் அளந்து, திரிவிக்கிரமனாக காட்சி தந்த எப்பெருமாளின் நாமங்களை இந்த மார்கழி மாதத்தில் பாடி பாவை நோம்பு கடைபிடித்தால், நாடு முழுவதும் எந்த குறையும் இல்லாதம் மாதம் மூன்று முறை மழை பெய்யும். அதனால் செந்நெல் வளர, அந்த வயல் நடுவே மீன்கள் துள்ளி விளையாடும். அழகிய நெய்தல் பூக்களில் வண்டுகள் தேன் எடுக்க தேடி வரும். அத்தகைய செழிப்பில், பசுக்கல் வள்ளலை போல் குடம் குடமாக பாலை தருகின்றன. பெருமாளை போற்றி பாடிக் கொண்டே இருந்தால் இது போன்ற பல நன்மைகளை பெற்று, குறைவின்றி செல்வங்களை பெற்று, நிறைவாக வாழலாம்.


---


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2026 குடியரசு தின விழா அணிவகுப்பில்.. தமிழ்நாட்டின் பசுமை மின் சக்தி ஊர்தி பங்கேற்பு

news

ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில்.. ஷெபாலி வர்மா அதிரடி உயர்வு.. 6வது இடம்!

news

புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்

news

ஒருபுறம் புதின் வீட்டின் மீது தாக்குதல்.. மறுபுறம் சமாதான முயற்சி.. உக்ரைன் ரஷ்யா.. தொடர் பதற்றம்!

news

Cinema Nostalgia.. இன்று ஏன் இத்தகைய கருத்துப்படங்கள் அரிதாகின்றன?

news

"பந்தயம் என்பது நடிப்பு அல்ல": அஜித் குமாரின் கார் பந்தய ஆவணப்படம் வெளியீடு

news

மாமல்லபுரத்தில் களை கட்டிய நாட்டிய விழா.. நாளை என்ன ஸ்பெஷல் தெரியுமா?

news

புத்தாண்டு அதிரடி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 'பேடே சேல்' (Pay Day Sale) அறிவிப்பு!

news

நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்....தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி சரிவு

அதிகம் பார்க்கும் செய்திகள்