மார்கழி 5 - ஆண்டாள் அருளிய திருப்பாவை.. பாடல் 5.. மாயனை மன்னு வட மதுரை மைந்தனை!

Dec 19, 2024,05:03 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருப்பாவை பாசுரம் 5 :


மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்

தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது

வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க,

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பு ஏலோர் எம்பாவாய்.




பொருள் :


மாய செயல்களைச் செய்யும் கண்ணனை, வட மதுரையில் பிறந்த திருக்குமாரனை, பெருகியோடும் தூய்மையான யமுனை நதிக்கரையில் வசிப்பவனை, ஆயர் குளத்தில் விளக்கு போல் அவதாரம் எடுத்து யசோதைக்கு பெருமை தேடிக்கொடுத்த தாமோதரனை, பரிசுத்ததுடன் அணுகி மலர்களை தூவி வணங்கி , வாயாறப்பாடி நாம் நெஞ்சார தியானிப்போம். முற்பிறவியில் செய்த பாவங்களும் பின்வரும் பாவங்களும் அவன் அருளால் தீயில் விழுந்த பஞ்சாக உரு தெரியாமல் அழிந்து போகும். எனவே பகவான் கிருஷ்ணனின் நாமங்களைச் சொல்லி பாடி போற்றுவோம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இனி அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது: டாக்டர் ராமதாஸ் போட்ட கண்டிஷன்!

news

புதுச்சேரி துணை நிலை ஆளுநருடன் மோதல்.. சமாதானமானார் முதல்வர் என். ரங்கசாமி!

news

மதுரையில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல்: சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா.. 29 தெலுங்கு நடிகர், நடிகைகள் மீது வழக்கு

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

தமிழக வெற்றிக் கழகம் என்று படகுகளில் எழுதினால் மானியம் மறுப்பதா.. விஜய் கண்டனம்

news

அதிமுகவை மீட்க முடியாதவர் பழனிச்சாமி தமிழகத்தை மீட்பேன் என்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

எதிர்க்கட்சித் தலைவர் சங்கிகள்... எழுதிக் கொடுப்பதை அப்படியே வாசித்து வருகிறார்: அமைச்சர் சேகர்பாபு

news

புதுப் புது வரலாறு படைக்கக் காத்திருக்கும் சுப்மன் கில்.. 4 உலக சாதனைகளுக்கு ஆபத்து!

அதிகம் பார்க்கும் செய்திகள்