மார்கழி 5 - ஆண்டாள் அருளிய திருப்பாவை.. பாடல் 5.. மாயனை மன்னு வட மதுரை மைந்தனை!

Dec 19, 2024,05:03 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருப்பாவை பாசுரம் 5 :


மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்

தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது

வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க,

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பு ஏலோர் எம்பாவாய்.




பொருள் :


மாய செயல்களைச் செய்யும் கண்ணனை, வட மதுரையில் பிறந்த திருக்குமாரனை, பெருகியோடும் தூய்மையான யமுனை நதிக்கரையில் வசிப்பவனை, ஆயர் குளத்தில் விளக்கு போல் அவதாரம் எடுத்து யசோதைக்கு பெருமை தேடிக்கொடுத்த தாமோதரனை, பரிசுத்ததுடன் அணுகி மலர்களை தூவி வணங்கி , வாயாறப்பாடி நாம் நெஞ்சார தியானிப்போம். முற்பிறவியில் செய்த பாவங்களும் பின்வரும் பாவங்களும் அவன் அருளால் தீயில் விழுந்த பஞ்சாக உரு தெரியாமல் அழிந்து போகும். எனவே பகவான் கிருஷ்ணனின் நாமங்களைச் சொல்லி பாடி போற்றுவோம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா த‌வெக?

news

அதிமுக - பாஜக கூட்டணியை கண்டு திமுக நடுக்கிப்போயுள்ளது: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

news

மார்கழித் திங்கள் அல்லவா.. மதி கொஞ்சும் நாள் அல்லவா.. மார்கழி மாத சிறப்புகள்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம் தொட்ட நிலையில் இன்று சற்று குறைவு!

news

ஜோர்டானில் பிரதமர் நரேந்திர மோடி.. 2 நாள் சுற்றுப்பயணத்தில் என்னவெல்லாம் காத்திருக்கு?

news

365 நாட்களும் கவிதை.. வீடு தேடி வரும் சான்டாவின் சர்ப்பிரைஸ் பரிசுகள்.. கலக்கும் Creative Writers

news

ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!

news

ஐபிஎல் 2026.. மினி ஏலத்திற்கு அணிகள் ரெடி.. யாரிடம் எவ்வளவு பணம் இருக்கு பாருங்க!

news

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களே.. ரெடியா.. மார்ச் 26ல் தொடங்குகிறது.. ஐபிஎல் 2026!

அதிகம் பார்க்கும் செய்திகள்