மார்கழி 5 - ஆண்டாள் அருளிய திருப்பாவை.. பாடல் 5.. மாயனை மன்னு வட மதுரை மைந்தனை!

Dec 19, 2024,05:03 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருப்பாவை பாசுரம் 5 :


மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்

தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது

வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க,

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பு ஏலோர் எம்பாவாய்.




பொருள் :


மாய செயல்களைச் செய்யும் கண்ணனை, வட மதுரையில் பிறந்த திருக்குமாரனை, பெருகியோடும் தூய்மையான யமுனை நதிக்கரையில் வசிப்பவனை, ஆயர் குளத்தில் விளக்கு போல் அவதாரம் எடுத்து யசோதைக்கு பெருமை தேடிக்கொடுத்த தாமோதரனை, பரிசுத்ததுடன் அணுகி மலர்களை தூவி வணங்கி , வாயாறப்பாடி நாம் நெஞ்சார தியானிப்போம். முற்பிறவியில் செய்த பாவங்களும் பின்வரும் பாவங்களும் அவன் அருளால் தீயில் விழுந்த பஞ்சாக உரு தெரியாமல் அழிந்து போகும். எனவே பகவான் கிருஷ்ணனின் நாமங்களைச் சொல்லி பாடி போற்றுவோம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்