- இரா. மும்தாஜ் பேகம்
பஞ்சு போல் மேகக் கூட்டம்
பகவான் சிரசில் முத்தமிட
பாற்கடலின் அலைகள் எல்லாம்
பாதங்களை முத்தமிட
அரபிக்கடல் காற்று
அய்யனின் அங்கமெல்லாம் அரவணைக்க
அன்னை இயற்கையவள்
ஆனந்தமாய் கொஞ்சிடவே

முக்கடல் சங்கமத்தில்
முப்பாலை மொழிந்திடவே
ஐயனின் சிலை யொன்று
அழகாய் நிற்கின்றதே.
அமைதியை நாடிடவே
அன்புடைமை போதுமென்றான்
கருணையை பொழிந்திடவே
கயமையை நீக்க சொன்னான்.
ஒழுக்கத்தை உயிரை விட மேலாக
ஓம்ப சொன்னான்
ஒப்புரவால்;
வாழ்க்கையில்
வரும் கேட்டை ஏற்றமே வாழச் சொன்னான்.
பழிக்கஞ்சி நேர்மையாய் பொருளீட்டி
பகுத்துண்டு வாழ்ந்திடச் சொன்னான்
அழுக்காறு,அவா, வெகுளி, இன்னாச்சல்
இன்பமாய் வாழ்வதே அறம் என்றான்.
(எழுத்தாளர் இரா. மும்தாஜ் பேகம், திருச்சியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியை)
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}