முக்கடல் சங்கமத்தில்.. முப்பாலை மொழிந்திடவே.. ஐயனின் சிலையொன்று.. அழகாய் நிற்கின்றதே!

Jan 16, 2026,03:31 PM IST

- இரா. மும்தாஜ் பேகம்


பஞ்சு போல் மேகக் கூட்டம்

பகவான் சிரசில் முத்தமிட

பாற்கடலின் அலைகள் எல்லாம்

பாதங்களை முத்தமிட


அரபிக்கடல் காற்று

அய்யனின் அங்கமெல்லாம் அரவணைக்க

அன்னை இயற்கையவள்

ஆனந்தமாய் கொஞ்சிடவே




முக்கடல் சங்கமத்தில்

முப்பாலை மொழிந்திடவே

ஐயனின் சிலை யொன்று

அழகாய் நிற்கின்றதே.


அமைதியை நாடிடவே

அன்புடைமை போதுமென்றான்

கருணையை பொழிந்திடவே

கயமையை நீக்க சொன்னான்.


ஒழுக்கத்தை உயிரை விட மேலாக

ஓம்ப சொன்னான்

ஒப்புரவால்; 

வாழ்க்கையில் 

வரும் கேட்டை ஏற்றமே வாழச் சொன்னான்.

 

பழிக்கஞ்சி நேர்மையாய் பொருளீட்டி

பகுத்துண்டு வாழ்ந்திடச் சொன்னான்

அழுக்காறு,அவா, வெகுளி, இன்னாச்சல்

இவற்றைப் புறந்தள்ளி

இன்பமாய் வாழ்வதே அறம் என்றான்.


(எழுத்தாளர் இரா. மும்தாஜ் பேகம், திருச்சியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

news

அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்