முக்கடல் சங்கமத்தில்.. முப்பாலை மொழிந்திடவே.. ஐயனின் சிலையொன்று.. அழகாய் நிற்கின்றதே!

Jan 16, 2026,03:31 PM IST

- இரா. மும்தாஜ் பேகம்


பஞ்சு போல் மேகக் கூட்டம்

பகவான் சிரசில் முத்தமிட

பாற்கடலின் அலைகள் எல்லாம்

பாதங்களை முத்தமிட


அரபிக்கடல் காற்று

அய்யனின் அங்கமெல்லாம் அரவணைக்க

அன்னை இயற்கையவள்

ஆனந்தமாய் கொஞ்சிடவே




முக்கடல் சங்கமத்தில்

முப்பாலை மொழிந்திடவே

ஐயனின் சிலை யொன்று

அழகாய் நிற்கின்றதே.


அமைதியை நாடிடவே

அன்புடைமை போதுமென்றான்

கருணையை பொழிந்திடவே

கயமையை நீக்க சொன்னான்.


ஒழுக்கத்தை உயிரை விட மேலாக

ஓம்ப சொன்னான்

ஒப்புரவால்; 

வாழ்க்கையில் 

வரும் கேட்டை ஏற்றமே வாழச் சொன்னான்.

 

பழிக்கஞ்சி நேர்மையாய் பொருளீட்டி

பகுத்துண்டு வாழ்ந்திடச் சொன்னான்

அழுக்காறு,அவா, வெகுளி, இன்னாச்சல்

இவற்றைப் புறந்தள்ளி

இன்பமாய் வாழ்வதே அறம் என்றான்.


(எழுத்தாளர் இரா. மும்தாஜ் பேகம், திருச்சியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Poem: மருதாணி!

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்