திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை.. கும்பலின் தலைவன் உள்பட 2 பேர் ஹரியானாவில் கைது!

Feb 17, 2023,09:39 PM IST

சென்னை: திருவண்ணாமலையில் துணிகரமாக நடந்த ஏடிஎம் கொள்ளையில்  ஹரியானாவைச் சேர்ந்த 2 கொள்ளையர்கள் அங்கு வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களை விமானம் மூலம் சென்னை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 4 இடங்களில் ஏடிஎம் மெஷின்களை உடைத்து அதிலிருந்து ரூ. 72.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த துணிகர திருட்டு தமிழ்நாடு காவல்துறைக்கு விடப்பட்ட சவாலாக பார்க்கப்பட்டது.


வட மாநிலக் கொள்ளையர்களே இதில் சம்பந்தப்பட்டிருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். இதையடுத்து இந்தக் கொள்ளையர்களைப் பிடிக்க பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவர்கள் நடத்திய தீவிர வேட்டையில் ஹரியானாவைச் சேர்ந்த கொள்ளையர்கள்தான் இதைச் செய்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ஹரியானா விரைந்த தமிழ்நாடு போலீஸார், அங்கு வைத்து இருவரை பிடித்தனர். அவர்களது பெயர்கள் - முகம்மது ஆரிப் மற்றும் ஆசாத் கான். இருவரையும் பிடித்த போலீஸார் அவர்களிடமிருந்து ரூ. 3. லட்சம் பணத்தை பறிமுதல்செய்தனர். அவர்கள் இருவரும் அவர்களது சொந்த கிராமத்தில் பதுங்கியிருந்தபோது அங்கு வைத்து உள்ளூர் போலீஸாரின் உதவியுடன் போலீஸார் கைது செய்தனர். பின்னர்  அவர்களை உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது கஸ்டடியில் தமிழ்நாடு போலீஸார் எடுத்தனர்.


இரு கொள்ளையர்களும் பின்னர் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டனர்.  இந்த இருவரையும் வைத்து கொள்ளையில் ஈடுபட்ட மற்றவர்களையும் போலீஸார் பிடிக்கவுள்ளனர். ஏற்கனவே இதுதொடர்பாக குஜராத்துக்கும், கர்நாடகத்துக்கும் தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!

news

கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்

news

மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!

news

அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

news

பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!

news

அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!

news

வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி

news

தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்.. முதல்வர் மு க ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்