- கலைவாணி கோபால்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மலை உச்சிக்கு மகா தீபம் ஏற்றும் கொப்பரை கொண்டு செல்லப்பட்டது.
டிசம்பர் மாதம் என்றாலே, மிகச் சிறப்பு வாய்ந்தது அது. சென்னையின் சிறப்பு என்றால் மழை, திருவண்ணாமலையின் சிறப்பு என்றால் தீபத்திருவிழா. இந்த தீபத் திருவிழா குறைந்தது பத்து நாட்களாக நடைபெறும்.
முதலாம் நாள்: கொடியேற்றத்துடன் தொடங்கி கார்த்திகை பிரம்மோற்சவம் நடைபெறும்.
இரண்டாம் நாள்: பஞ்ச மூர்த்திகள் இந்திர விமானத்தில் வலம் வருவார்கள்
மூன்றாம் நாள்: 1008 சங்க அபிஷேகம் நடைபெறும்
நான்காம் நாள்: காமதேனு வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளும் கற்பக விருஷத்தில் இறைவியும் உலா வருவார்கள்
ஐந்தாம் நாள்: பகலில் பூஜையும் இரவில் வெள்ளி ரிஷப வாகனத்தில் உற்சவமூர்த்திகள் உலா வருவார்கள்
ஆறாம் நாள்: 63 நாயன்மார்கள் ஊர்வலம்
ஏழாம் நாள்; பஞ்ச மூர்த்திகள் மகா ரதத்தில் ஊர்வலமாக எழுந்துதருளப் பெறுதல்
எட்டாம் நாள்: தரையைத் தொடாத குதிரை வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் உலா வருதல்
ஒன்பதாம் நாள்: விடியற்காலை 4 மணி முதல் பரணி தீபம் ஏற்றப்பட்டு, கைலாச வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் உழவர்கள் உலா வருதல்
பத்தாம் நாள்: பத்தாவது நாளே மிகவும் சிறப்பு வாய்ந்தது.

பத்தாம் நாள் அதாவது வருகின்ற டிசம்பர் 3, அன்று பிற்பகலுக்குப்பின் மாலை 6 மணி அளவில் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் கார்த்திகை மகா தீபம் இப்போது எடுத்துச் செல்லும் கொப்பரையில் ஏற்றப்படுதலை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதில் சிறப்பான விஷயங்கள் என்னவென்றால், மகாதீபம் ஏற்றப்படும் போது பஞ்சமூர்த்தி தரிசனம், அர்த்த நாரீஸ்வரர் தரிசனம், மகாதீபம் உச்சி தரிசனம் என இந்த தீபம் முக்கியத்துவம் வந்ததாக மக்களிடையே கருதப்படுகிறது.
அதன்பின் இரவில், தெப்பத்திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. இது முக்கியத்துவம் என்னவென்றால், ஒன்பது நாட்களாக உலா வந்த உற்சவமூர்த்திகளை குளிர வைப்பதற்காக கோயில் குளங்களில் பூ மேடை அமைத்து அதில் பஞ்சமூர்த்திகளுக்கு அவர்களை குளிர்விக்கும் விதமாக பூஜைகள் நடைபெறும். இதுவும் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது.
ஆதியும் அந்தமும் இல்லா இறைவன் ஜோதி ரூபத்தில் காட்சி தருவதாக இந்த கார்த்திகை திருவிழா நடைபெறுகிறது.
(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}