திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோவில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று அரோகரா கோஷம் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவண்ணாமலை கோவில் கார்த்திகை தீபத்திருவிழா உலக பிரசித்தி பெற்ற விழாவாகும். இந்த திருவிழாவிற்கு பிற மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இருந்து பக்தர்கள் வந்து கலந்து கொள்வர். கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்தல் மற்றும் கார்த்திகை தீபத்திருநாள் தான் அனைவருக்கும் தெரிந்தது.
கார்த்திகை மாதம் நடைபெறும் தீபத்திருநாள் அன்று வீடுகள் மற்றும் கோவில்களில் விளக்கேற்றி வழிபாடு செய்து கொண்டாடுவர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் விளங்குகிறது. திருக்கார்த்திகை தீப திருவிழாவிற்காக அண்ணாமலையார் திருக்கோவிலில் கொடியோற்றத்துடன் திருவிழா தொடங்குவது வழக்கம்.
அந்த கொடியோற்ற நிகழ்வு பக்தர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது. அண்ணாமலையார் முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. கொடி ஏற்றியதும் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தர்கள் முழங்கினர். இன்று அதிகாலை சுமார் 5.31 மணியளவில் கொடியேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு அரோகரா கோஷ மிட்டதுடன் சாமி தரிசனமும் செய்து வழிபட்டனர். இன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு இவ்விழா நடைபெறும். திருவிழாவில் காலை மாலை சாமி வீதி உலா நடைபெறும். முக்கிய நிகழ்வாக வருகிற நவம்பர் 22ம் தேதி இரவு வெள்ளி ரதத்தில் சாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்.
நவம்பர் 23ம் தேதி மகா தேரோட்டமும், நவம்பர் 26ம் தேதி அதிகாலை திருக்கோவில் முன்பு அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படும்.
இந்த 10 நாட்களும் திருவண்ணாமலை விழாக் கோலம் பூண்டிருக்கும். இந்த திருவிழாவில் லட்சக்கானக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்த விழாவிற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 5000த்திற்கும் அதிகமானவர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக கார்த்திகை தீபத்தன்று 3,500 சிறப்பு பேருந்துகள் இயக்கவும் போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
முதல் ரவுண்டில் பாதிகூட்டணியை காணோம்..2வதில் டிரைவர் கூட இருப்பாரானு தெரியலை: உதயநிதி ஸ்டாலின்!
26 ஆண்டுக்குப் பின் மணந்த "ரோஜா".. மிரட்டிய சத்தியன் மகாலிங்கம்.. இன்னொரு ரவுண்டு வாங்க பாஸ்!
ரஸ்தாளி வாழைப்பழம்.. ஊட்டச்சத்து நிறைந்த ராயல் பழம்.. டெய்லி சாப்பிடுங்க.. ஹெல்த்தியா இருங்க!
திருச்சி சுற்றுப் பயணம்.. தவெக தலைவர் விஜய்க்கு போலீஸ் விதித்த 23 நிபந்தனைகள்!
செப்டம்பரில் 12ல் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்கிறார்
நேபாளத்தில் வன்முறை... பிரதமர் ராஜினாமா... ராணுவ ஆட்சி அமல்!
Gold rate: எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வரும் தங்கம் விலை
திருச்சி மரக்கடையை அதிர வைக்க தவெக ரெடி.. ஆனால் தொண்டர்களிடம் நிதானம் தேவை!
அமித்ஷாவை சந்திக்கச் சென்ற செங்கோட்டையன்.. பாஜக., மேலிடம் சொன்ன சேதி என்ன தெரியுமா?
{{comments.comment}}