திருவண்ணாமலை மண்சரிவு...உயிரிழந்த 7 பேரின் உடல்கள் மீட்பு

Dec 03, 2024,01:23 PM IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 7வது நபரின் உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று 5 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.


வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக நாகை, மயிலாடுதுறை, சென்னை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. கனமழையால் இந்த மாவட்டங்கள்  பெரும் சேதத்தை சந்தித்தன. இதனால் தங்களின் உடைமைகளை இழந்து மக்கள் செய்வது அறியாமல் திகைத்து வருகின்றனர். திருவண்ணாமலையில் தொடர்ந்து கனமழை பெய்ததினால், சுமார் 2,668 அடி உயர திருவண்ணாமலை மலையில் இருந்து  பாறைகள் உருண்டு மலை அடிவாரத்தில் உள்ள வஉசி தெருவில் இருக்கும் வீடுகளின் மீது விழுந்தது.




அப்போது, மலையில் இருந்து மண் சரிந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீருடன் மண்ணும் சரிந்து விழுந்தது. இதில் ஒரு வீட்டின் மீது பாறை மற்றும் மண் சரிந்து விழுந்தது. இதனால், அந்த வீட்டில் இருந்தவர்கள் யாரும் வெளியில் வர முடியாமல் போனது.  அந்த வீட்டில் ராஜ்குமார், மீனா, இனியா, மகா, கவுதம், வினோதினி,ரம்யா  என்ற 7 பேர் இருந்ததாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், மண்சரிவில் சிக்கிய 7 பேரையும் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.


இந்த நிலையில், திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து முதலில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீட்புக் குழுவினர் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.இதனையடுத்து 2 பேரின் உடல்கள் கிடைத்த நிலையில், இன்று மேலும் 2 பேர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாறை விழுந்த நிலையில், மீட்கப்பட்ட உடல்கள் சிதைந்து இருந்தன. மீட்கப்பட்ட உடல்கள் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இறந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஃபெஞ்சல் புயலின் கோர தாண்டவத்தை எண்ணி அப்பகுதி மக்கள் கண்ணீர் சிந்தி வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருப்பரங்குன்றம் விவகாரம்.. மதுரை ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து.. உச்சநீதிமன்றத்தை நாடும் தமிழக அரசு

news

திருப்பரங்குன்றம் விவகாரம்... தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி

news

பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை

news

மாம்பழம் சின்னம் முடக்கப்படும்...பாமக வழக்கில் தேர்தல் கமிஷன் பதில்

news

திமுக.,வுடன் பேச்சுவார்த்தை நடத்திய காங்கிரஸ் ஐவர் குழு...பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்