திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 7வது நபரின் உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று 5 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக நாகை, மயிலாடுதுறை, சென்னை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. கனமழையால் இந்த மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. இதனால் தங்களின் உடைமைகளை இழந்து மக்கள் செய்வது அறியாமல் திகைத்து வருகின்றனர். திருவண்ணாமலையில் தொடர்ந்து கனமழை பெய்ததினால், சுமார் 2,668 அடி உயர திருவண்ணாமலை மலையில் இருந்து பாறைகள் உருண்டு மலை அடிவாரத்தில் உள்ள வஉசி தெருவில் இருக்கும் வீடுகளின் மீது விழுந்தது.

அப்போது, மலையில் இருந்து மண் சரிந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீருடன் மண்ணும் சரிந்து விழுந்தது. இதில் ஒரு வீட்டின் மீது பாறை மற்றும் மண் சரிந்து விழுந்தது. இதனால், அந்த வீட்டில் இருந்தவர்கள் யாரும் வெளியில் வர முடியாமல் போனது. அந்த வீட்டில் ராஜ்குமார், மீனா, இனியா, மகா, கவுதம், வினோதினி,ரம்யா என்ற 7 பேர் இருந்ததாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், மண்சரிவில் சிக்கிய 7 பேரையும் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து முதலில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீட்புக் குழுவினர் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.இதனையடுத்து 2 பேரின் உடல்கள் கிடைத்த நிலையில், இன்று மேலும் 2 பேர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாறை விழுந்த நிலையில், மீட்கப்பட்ட உடல்கள் சிதைந்து இருந்தன. மீட்கப்பட்ட உடல்கள் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இறந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஃபெஞ்சல் புயலின் கோர தாண்டவத்தை எண்ணி அப்பகுதி மக்கள் கண்ணீர் சிந்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை
தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை
இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்
Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!
கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?
சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!
Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!
இயற்கை ஒரு மாபெரும் ஆசிரியர்... The greatest lessons I have learnt is
{{comments.comment}}