திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 7வது நபரின் உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று 5 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக நாகை, மயிலாடுதுறை, சென்னை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. கனமழையால் இந்த மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. இதனால் தங்களின் உடைமைகளை இழந்து மக்கள் செய்வது அறியாமல் திகைத்து வருகின்றனர். திருவண்ணாமலையில் தொடர்ந்து கனமழை பெய்ததினால், சுமார் 2,668 அடி உயர திருவண்ணாமலை மலையில் இருந்து பாறைகள் உருண்டு மலை அடிவாரத்தில் உள்ள வஉசி தெருவில் இருக்கும் வீடுகளின் மீது விழுந்தது.

அப்போது, மலையில் இருந்து மண் சரிந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீருடன் மண்ணும் சரிந்து விழுந்தது. இதில் ஒரு வீட்டின் மீது பாறை மற்றும் மண் சரிந்து விழுந்தது. இதனால், அந்த வீட்டில் இருந்தவர்கள் யாரும் வெளியில் வர முடியாமல் போனது. அந்த வீட்டில் ராஜ்குமார், மீனா, இனியா, மகா, கவுதம், வினோதினி,ரம்யா என்ற 7 பேர் இருந்ததாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், மண்சரிவில் சிக்கிய 7 பேரையும் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து முதலில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீட்புக் குழுவினர் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.இதனையடுத்து 2 பேரின் உடல்கள் கிடைத்த நிலையில், இன்று மேலும் 2 பேர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாறை விழுந்த நிலையில், மீட்கப்பட்ட உடல்கள் சிதைந்து இருந்தன. மீட்கப்பட்ட உடல்கள் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இறந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஃபெஞ்சல் புயலின் கோர தாண்டவத்தை எண்ணி அப்பகுதி மக்கள் கண்ணீர் சிந்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் நாளை திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
தெறிக்க விட்ட 'Thalaivar 174'டீசர்...ஹீரோ ரஜினியா? கமலா?...இவ்வளவு விஷயம் பண்ணிருக்காங்கலே
சீமான் போட்டியிடப் போவது எங்கே.. திருச்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களை அறிவிக்கிறார்!
கே. என். நேரு வசம் 41 தொகுதிகள் மட்டுமல்ல.. திமுகவின் மொத்தக் கோட்டையுமே இருக்கு!
திமுக அமைத்துள்ள 7 பேர் குழு...கூட்டணி கட்சிகளிடம் இவர்கள் என்ன பேசுவார்கள்?
கமல்ஹாசனின் நம்பிக்கை.. ரஜினிகாந்த்தின் பெருந்தன்மை.. பெயரில் என்ன இருக்கு?
என்ன சார் சொல்ல வர்றீங்க?...திமுக கூட்டணி பற்றி கமல் சொன்ன பதில்...குழம்பிய செய்தியாளர்கள்
47 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் கமல்ஹாசன் - ரஜினிகாந்த்!
தாய் மொழியாகிய தமிழ் மொழியே நம் தமிழரின் தனி அடையாளமே!
{{comments.comment}}