விடைபெற்றார் காயத்ரி கிருஷ்ணன்.. வந்தார் புது கலெக்டர் சாருஸ்ரீ.. கல்வியில் கலக்குமா திருவாரூர்?

Feb 05, 2023,01:42 PM IST
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக சாருஸ்ரீ பதவியேற்றுள்ளார். இதுவரை திருவாரூர் கலெக்டராக இருந்து வந்த காயத்ரி கிருஷ்ணன் விடைபெற்றுள்ளார்.

1997ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் 34வது கலெக்டராக காயத்ரி கிருஷ்ணன் பணியாற்றி வந்தார். கலெக்டராக வந்த வேகத்திலேயே மக்களின் அபிமானத்தைப் பெற்றவர் காயத்ரி கிருஷ்ணன். தெளிவான நிர்வாகத்தைக் கொடுத்தவர். சாமானிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முக்கியத்துவம் கொடுத்தவர்.


காயத்ரி கிருஷ்ணன்

இவர் பொள்ளாச்சியில் முன்பு சார் ஆட்சியராகப் பணியாற்றியபோது, மரங்களை அகற்றுவதற்கு புதிய யோசனையை அமல்படுத்தியவர். அதாவது மரங்களை வெட்டி அதை வீணடிக்காமல் அப்படியே வேரோடு பெயர்த்து வேறு இடத்தில் நடும் முறையை அங்கு அமல்படுத்தி பலரது பாராட்டுக்களைப் பெற்றவர். திருவாரூர் கலெக்டராக இருந்தபோதும் சிறப்பாக செயல்பட்டு  மக்களின் அன்பையும், பாராட்டையும் பெற்றார்.

இந்த நிலையில் காயத்ரி கிருஷ்ணன் சமீபத்தில் கலெக்டர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டார். அவருக்குப் பதில் சாருஸ்ரீ புதிய கலெக்டராக அறிவிக்கப்பட்டார்.   இவரும் மக்களின் அன்பைப் பெற்ற சூப்பர் கலெக்டர்தான்.  கோவையை சொந்த ஊராகக் கொண்ட சாருஸ்ரீ கல்வி வளர்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டுபவர். குறிப்பாக பெண் கல்விக்காக குரல்கொடுப்பவர்.  இவர் 2014ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியானவர். தமிழ்நாட்டிலேயே முதலிடத்தில் தேறி சாதனை படைத்தவர் சாருஸ்ரீ.


சாருஸ்ரீ

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இருந்தவர் சாருஸ்ரீ. தற்போது திருவாரூர் மாவட்ட ஆட்சியராக பணியேற்றுள்ளார். அவருக்கு திருவாரூர் மக்கள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். பலர்,  திருவாரூர் மாவட்டத்தில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. அதை சரி செய்வதில் முன்னுரிமை தருமாறு கோரியுள்ளனர். 

திருவாரூர் பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரையிலான சாலை, திருவாரூர் - மயிலாடுதுறை சாலை ஆகியவற்றை சீர்செய்ய வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்