- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 12 திருவெம்பாவை பாசுரம் 12.. ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்!
திருவெம்பாவை பாசுரம் 12 :
ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்!

பொருள் :
இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் பிறவியாகிய துன்பம் இனி மேல் நமக்கு ஏற்படாமல் தடுக்கும் வல்லகை கொண்டவர் கங்கையை தலையில் கொண்டவனும், சிறந்த தில்லை சிதம்பலத்தில் கையில் அக்னியுடன் ஓயாமல் ஆடிக் கொண்டிருக்கும் ஆடல் வல்லவனும், வானத்தையும் பூவுலகையும் மற்ற உலகங்களையும் காத்தும், படைத்தும், அழித்தும் விளையாடுபவனுமான தன்மை கொண்ட நம் சிவ பெருமான் மட்டுமே. அவரை நம் கரங்களிலுள்ள வளையல்கள் ஒலியெழுப்பவும், இடுப்பிலுள்ள ஆபரணங்கள் சத்தமிடவும், பூக்கள் பூத்திருக்கும் பொய்கையில் நீந்தி, கரையோறுவதை போல், இந்த பிறவி பெருங்கடலை நீங்கி, கரையேற, சிவாய நம என்னும் திருநாமத்தை சொல்லி, ஈசனின் பொற்பாதங்களை வணங்கி, முக்தி என்னும் பெரும் பேற்றை அடைந்திடுவோம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Tamil Short story: குழூஉக்குறி.. ஒரு நிமிடக் கதை (13)
World Bicyle day: சிக்கு.. சிக்கு மிதிவண்டி.. சின்னப் பையன் மிதிவண்டி!
தர்ஷனின் தரமான சம்பவங்கள்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
World Bicycle day: ஓரம்போ ஓரம்போ.. இன்னும் சைக்கிள் ஓட்டுபவரா நீங்க.. வாழ்த்துகள்ங்க!
விண்ணுலகமே வியந்து போகும்.. அற்புதமாக நடந்தேறிய.. வரதராஜ பெருமாள் திருத்தேர் உற்சவம்
திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?
முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?
இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இசைஞானி என்னும் இசைத்தோணி!
{{comments.comment}}