மார்கழி 15 திருவெம்பாவை பாசுரம் 15 - ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே!

Dec 29, 2024,04:32 PM IST
- ஸ்வர்ணலட்சுமி


திருவெம்பாவை பாசுரம் 15 :

ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெருந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரைற்கு இங்ஙனங பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.



பொருள் :

அழகிய ஆடைகளையும், ஆபரணங்களையும் அணிந்த பெண்களே! நம் தோழி என்னுடைய தலைவன் என சிவனை ஒவ்வொரு முறையும் அழைப்பாள். அவரின் சிறப்புகளையும் வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பாள். மனம் மகிழ இவ்வாறு அவள் பேசுவதை கேட்கும் போது பக்தி பெருக்கில் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக பெருகும். அப்படி பேசும் அவளுக்கு ஏற்படும் பக்தி பரவசத்தில் இருந்து அவளால் மீள முடியாது. அந்த சமயத்தில் விண்ணில் இருந்து எந்த தேவன் வந்தாலும் அவள் வணங்க மாட்டாள். சிவ பெருமானை மட்டுமே தன்னுடைய தெய்வம் என பித்து பிடித்தது போல் இருப்பாள். அவளைப் வோலவே நம்மையும் ஆட்கொள்ள காத்திருக்கும் பல கலைகளுக்கும் தலைவாக இருக்கக் கூடிய சிவனின் திருவடிகளை பணிந்த பாடுவோம். பூக்கள் நிறைந்த நீண்ட குளத்தில் பாய்ந்து நீராடுவோம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்