மார்கழி 15 திருவெம்பாவை பாசுரம் 15 - ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே!

Dec 29, 2024,04:32 PM IST
- ஸ்வர்ணலட்சுமி


திருவெம்பாவை பாசுரம் 15 :

ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெருந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரைற்கு இங்ஙனங பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.



பொருள் :

அழகிய ஆடைகளையும், ஆபரணங்களையும் அணிந்த பெண்களே! நம் தோழி என்னுடைய தலைவன் என சிவனை ஒவ்வொரு முறையும் அழைப்பாள். அவரின் சிறப்புகளையும் வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பாள். மனம் மகிழ இவ்வாறு அவள் பேசுவதை கேட்கும் போது பக்தி பெருக்கில் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக பெருகும். அப்படி பேசும் அவளுக்கு ஏற்படும் பக்தி பரவசத்தில் இருந்து அவளால் மீள முடியாது. அந்த சமயத்தில் விண்ணில் இருந்து எந்த தேவன் வந்தாலும் அவள் வணங்க மாட்டாள். சிவ பெருமானை மட்டுமே தன்னுடைய தெய்வம் என பித்து பிடித்தது போல் இருப்பாள். அவளைப் வோலவே நம்மையும் ஆட்கொள்ள காத்திருக்கும் பல கலைகளுக்கும் தலைவாக இருக்கக் கூடிய சிவனின் திருவடிகளை பணிந்த பாடுவோம். பூக்கள் நிறைந்த நீண்ட குளத்தில் பாய்ந்து நீராடுவோம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்