- ஸ்வர்ணலட்சுமி
திருவெம்பாவை பாசுரம் 2 :
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராாப்பகல் நாம்
பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே
நேரமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீ சி யிவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடமீதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யா மாரோலோ ரெம்பாவாய்.

பொருள் :
பலவிதமான நகைகளை அணிந்த பெண்ணே, நாள் இரவும் பகலும் எப்போது பேசினாலும், எனது அன்புக்குரிய பெருமான் சிவ பெருமான் என்று கூவாய். ஆனால் இப்போது படுக்கையின் மீது பாசம் கொண்டு இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாயே என வீட்டிற்கு வெளியில் இருக்கும் தோழி கேலி பேசுகிறாள். அதற்கு வீட்டிற்குள் இருக்கும் பெண், அழகிய அணிகலன்களை அணிந்தவர்களே, கேலிப் பேச்சுக்கள் பேசி பொழுதை கழிப்பதற்கு இது நேரம் கிடையாது. வானவர்களுக்கும் கூட எளிதில் கிடைக்காத தன்னுடைய திருவடி மலர்களை நாம் பற்றிக் கொள்வதற்காக , நமக்கு அருள் செய்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார். அனைத்து உலகங்களும் கொண்டாடும், சிவலோகத்தின் தலைவனும், தில்லை சிற்றலம்பலத்தில் ஓயாது நடனமாடுபவனும் ஆகிய ஈசனின் அடியவர்கள் நாம். அவரது புகழை பாடி, அருளை பெறுவதை விடுத்து, இப்படி பேசி விளையாடிக் கொண்டிருபப்து சரியல்ல என பதிலளிக்கிறாள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}