- ஸ்வர்ணலட்சுமி
திருவெம்பாவை பாசுரம் 3 :
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்
பொருள் :
முத்து போன்ற அழகிய பற்களை காட்டி சிரித்து அனைவரையும் மயக்குபவளே! இதற்கு முன்பெல்லாம் நாங்கள் வந்து எழுப்புதற்கு முன்பே தயாராக நீயே இருப்பாய். சிவனே என்னுடைய தலைவன், இன்ப வடிவானவன், இனிமையானவன் என வாய் ஓயாமல் சிவனின் புகழை பாடிக் கொண்டே இருப்பாய். ஆனால் இப்போது இவ்வளவு எழுப்பியும் எழ மனம் இல்லாமல் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறாயே. கதறவை திற என்கிறார்கள் வெளியில் காத்திருக்கும் தோழி. அதற்கு பதிலளிக்கும் தூங்கிக் கொண்டிருக்கும் தோழி, " ஏதோ தெரியாமல் கண் அயர்ந்து விட்டேன். அதற்காக இப்படி கடுமையாக பேச வேண்டுமா? இறைவன் மீது பற்றுடைய பழமையான அடியவர்கள் நீங்கள். உங்களை போன்று பக்தி செய்வதிலும், விரதம் கடைபிடிப்பதிலும் எனக்கு அனுபவம் கிடையாது. பக்திக்கு நான் புதியவள். என்னுடைய தவறை பெரிதுபடுத்துவது சரியா? என வருந்தி சொல்கிறாள்.
அதற்கு வெளியில் காத்திருக்கும் தோழிகள், இறைவன் மீது வைத்துள்ள தூய்மையான அன்பானது, சிவனின் மீது தூய பக்தி படைத்தவர்களால் மட்டுமே முடியும் என்பது எங்களும் தெரியும். நீ சீக்கிரம் எழுந்து வர வேண்டும் என்பதற்காகவே நாங்கள் அவசரப்படுத்தினோம் என தெரிவிப்பதாக மாணிக்கவாசகர் எழுதி உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}