மார்கழி 4 மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாசுரம் 4.. ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ!

Dec 18, 2024,06:51 PM IST
- ஸ்வர்ணலட்சுமி

திருவெம்பாவை பாசுரம் 4:

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்
தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.




பொருள் :

அழகிய முத்துப் போன்ற பற்களை உடைய பெண்ணெ, இன்னும் உனக்கு பொழுது விடியவில்லையா?  என்ற கேட்ட தோழிடம், அழகிய கிளிகள் பேசும் மொழிகளை போன்ற இனிமையான சொற்களை பேசும் தோழிகள் அனைவரும் வந்து விட்டார்களா? என கேட்கிறாள் வீட்டிற்குள் இருக்கும் பெண். அதற்கு வெளியில் காத்திருக்கும் தோழி, வீட்டிற்குள் இருந்து இப்படி கேள்வியாக கேட்டுக் கொண்டிருக்கிறாயே, இது சரியா? வெளியில் வந்து நீயே எண்ணிப் பார்த்துக் கொள். ஆனால் அதுவரை காத்திருந்து பொழுதை வீணாக்க எங்களுக்கு விருப்பம் இல்லை. 

தேவர்களும் வணங்கி அருள் பெற காத்திருக்கும் அமுதம் போன்ற சிவ பெருமான் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய அருட் செல்வங்களை வாரி வழங்க காத்துக் கொண்டிருக்கிறார். அவரை புகழ்ந்து பாடி, மனம் நினைத்து உள்ளம் உருகிபாடிட நாங்கள் செல்ல வேண்டும். அனைவரும் சிவனை போற்றி பாட காத்துக் கொண்டிருக்கிறோம். நீ வந்து எண்ணிக்கையை சரி பார்த்துக் கொள். எண்ணிக்கை குறைந்தால் பிறகு சென்று நீ தூங்கிக் கொள் என்றாள்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

news

நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்

news

அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்