மார்கழி 4 மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாசுரம் 4.. ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ!

Dec 18, 2024,06:51 PM IST
- ஸ்வர்ணலட்சுமி

திருவெம்பாவை பாசுரம் 4:

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்
தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.




பொருள் :

அழகிய முத்துப் போன்ற பற்களை உடைய பெண்ணெ, இன்னும் உனக்கு பொழுது விடியவில்லையா?  என்ற கேட்ட தோழிடம், அழகிய கிளிகள் பேசும் மொழிகளை போன்ற இனிமையான சொற்களை பேசும் தோழிகள் அனைவரும் வந்து விட்டார்களா? என கேட்கிறாள் வீட்டிற்குள் இருக்கும் பெண். அதற்கு வெளியில் காத்திருக்கும் தோழி, வீட்டிற்குள் இருந்து இப்படி கேள்வியாக கேட்டுக் கொண்டிருக்கிறாயே, இது சரியா? வெளியில் வந்து நீயே எண்ணிப் பார்த்துக் கொள். ஆனால் அதுவரை காத்திருந்து பொழுதை வீணாக்க எங்களுக்கு விருப்பம் இல்லை. 

தேவர்களும் வணங்கி அருள் பெற காத்திருக்கும் அமுதம் போன்ற சிவ பெருமான் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய அருட் செல்வங்களை வாரி வழங்க காத்துக் கொண்டிருக்கிறார். அவரை புகழ்ந்து பாடி, மனம் நினைத்து உள்ளம் உருகிபாடிட நாங்கள் செல்ல வேண்டும். அனைவரும் சிவனை போற்றி பாட காத்துக் கொண்டிருக்கிறோம். நீ வந்து எண்ணிக்கையை சரி பார்த்துக் கொள். எண்ணிக்கை குறைந்தால் பிறகு சென்று நீ தூங்கிக் கொள் என்றாள்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்