மார்கழி 4 மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாசுரம் 4.. ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ!

Dec 18, 2024,06:51 PM IST
- ஸ்வர்ணலட்சுமி

திருவெம்பாவை பாசுரம் 4:

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்
தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.




பொருள் :

அழகிய முத்துப் போன்ற பற்களை உடைய பெண்ணெ, இன்னும் உனக்கு பொழுது விடியவில்லையா?  என்ற கேட்ட தோழிடம், அழகிய கிளிகள் பேசும் மொழிகளை போன்ற இனிமையான சொற்களை பேசும் தோழிகள் அனைவரும் வந்து விட்டார்களா? என கேட்கிறாள் வீட்டிற்குள் இருக்கும் பெண். அதற்கு வெளியில் காத்திருக்கும் தோழி, வீட்டிற்குள் இருந்து இப்படி கேள்வியாக கேட்டுக் கொண்டிருக்கிறாயே, இது சரியா? வெளியில் வந்து நீயே எண்ணிப் பார்த்துக் கொள். ஆனால் அதுவரை காத்திருந்து பொழுதை வீணாக்க எங்களுக்கு விருப்பம் இல்லை. 

தேவர்களும் வணங்கி அருள் பெற காத்திருக்கும் அமுதம் போன்ற சிவ பெருமான் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய அருட் செல்வங்களை வாரி வழங்க காத்துக் கொண்டிருக்கிறார். அவரை புகழ்ந்து பாடி, மனம் நினைத்து உள்ளம் உருகிபாடிட நாங்கள் செல்ல வேண்டும். அனைவரும் சிவனை போற்றி பாட காத்துக் கொண்டிருக்கிறோம். நீ வந்து எண்ணிக்கையை சரி பார்த்துக் கொள். எண்ணிக்கை குறைந்தால் பிறகு சென்று நீ தூங்கிக் கொள் என்றாள்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்