மார்கழி 4 மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாசுரம் 4.. ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ!

Dec 18, 2024,06:51 PM IST
- ஸ்வர்ணலட்சுமி

திருவெம்பாவை பாசுரம் 4:

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்
தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.




பொருள் :

அழகிய முத்துப் போன்ற பற்களை உடைய பெண்ணெ, இன்னும் உனக்கு பொழுது விடியவில்லையா?  என்ற கேட்ட தோழிடம், அழகிய கிளிகள் பேசும் மொழிகளை போன்ற இனிமையான சொற்களை பேசும் தோழிகள் அனைவரும் வந்து விட்டார்களா? என கேட்கிறாள் வீட்டிற்குள் இருக்கும் பெண். அதற்கு வெளியில் காத்திருக்கும் தோழி, வீட்டிற்குள் இருந்து இப்படி கேள்வியாக கேட்டுக் கொண்டிருக்கிறாயே, இது சரியா? வெளியில் வந்து நீயே எண்ணிப் பார்த்துக் கொள். ஆனால் அதுவரை காத்திருந்து பொழுதை வீணாக்க எங்களுக்கு விருப்பம் இல்லை. 

தேவர்களும் வணங்கி அருள் பெற காத்திருக்கும் அமுதம் போன்ற சிவ பெருமான் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய அருட் செல்வங்களை வாரி வழங்க காத்துக் கொண்டிருக்கிறார். அவரை புகழ்ந்து பாடி, மனம் நினைத்து உள்ளம் உருகிபாடிட நாங்கள் செல்ல வேண்டும். அனைவரும் சிவனை போற்றி பாட காத்துக் கொண்டிருக்கிறோம். நீ வந்து எண்ணிக்கையை சரி பார்த்துக் கொள். எண்ணிக்கை குறைந்தால் பிறகு சென்று நீ தூங்கிக் கொள் என்றாள்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு

news

தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

news

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!

news

எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு

news

அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!

news

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்

news

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்‌‌..!

news

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே

news

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்