மார்கழி 7 - திருவெம்பாவை பாசுரம் 7.. அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்

Dec 21, 2024,04:56 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மார்கழி 7 - திருவெம்பாவை பாசுரம் 7.. அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்


திருவெம்பாவை பாசுரம் 7:


அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்

உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்

சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்

தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்

என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்

சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ

வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்

என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.




பொருள் :


அம்மா! இதுவும் உன்னுடைய குணங்களில் ஒன்றா? தேவர்கள் உணர்ந்து அறிந்து கொள்ள முடியாதவனும், ஒப்பற்றவனும் பெருமைகள், சிறப்புகள் பலவற்றிற்கும் உடையவனாகிய நம்முடைய இறைவனை போற்றும் சங்கின் ஒலி கேட்டாலே, சிவ சிவ என்று வாயை ஓயாமல் சொல்லிக் கொண்டிருப்பாயே. தென்னாடுடையவன் என சொல்ல துவங்குவதற்கு முன்பே தீயில் இட்ட மெழுகு போல உள்ளம் உருகி, கண்களில் பக்தி கண்ணீராக பெருக்கி, எந்நாட்டவருக்கும் இறைவான போற்றி போற்றி கூறுவாயே. என்னுடைய பெருமைக்குரிய தலைவன், என்னுடைய அரசன், இனிமையானவன் என சொல்லிக் கொண்டி இருப்பாயே. இப்போது நாங்கள் பல விதங்களில் சிவனை பாடிக் கொண்டிருக்கிறோம்.


அதை நீ கேட்டாயாக. இதை கேட்டும் உன்னுடைய தூக்கத்தை விட மனம் இல்லையா? மனம் கல்லாக இருக்கும் இறைவனை உணரும் அறிவு இல்லாதவர்களை போல் இப்படி படுத்திருக்கின்றாயே. உன்னுடைய தூக்கத்தை என்னவென்று சொல்வது...உன்னை என்ன சொல்லு எழுப்புவது?



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சாதாரண வேலையில், அசாதாரண சேவை.. மர மனிதன் யோகநாதன்!

news

நீரின்றி உயிரில்லை.. நீரை சேமிக்கப் பழகுவோம்.. World Water Day

news

தண்ணீரை சேகரித்து.. அடுத்த தலைமுறைக்கு சேமித்துத் தர வேண்டும்.. மாணவர்களுக்கு அறிவுரை

news

நிலத்தடி நீரை உயர்த்துவோம்.. அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ வழி செய்வோம்!

news

கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை

news

புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!

news

சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?

news

டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்

news

பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்