- ஸ்வர்ணலட்சுமி
திருவெம்பாவை பாசுரம் 8:
கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்போருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழி! ஈதென்ன உறக்கமோ? வாய் திறவாய்!
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளானையே பாடேலோர் எம்பாவாய்!

பொருள் :
கோழிகள் கூவி விட்டது. பறவைகள் கீச்சிட்டு எழுந்து, கூட்டை விட்டு புறப்பட்டு விட்டன. எங்கும் பார்த்தாலும் காலை பொழுதின் அழகு நிரம்பி உள்ளது. திரும்பி திசை எங்கும் வெண் சங்கு இசைக்கும் சத்தம் கேட்க துவங்கி விட்டது. ஜோதி வடிவமாக காட்சி தந்த பரம்பொருளாகிய சிவ பெருமானின் பெரும் கருணையை எண்ணிய வியந்து பாடிக் கொண்டிருக்கிறோம். இவைகள் அனைத்தும் உன்னுடைய காதுகளில் விழவில்லையா? வாழ்க உன்னுடைய உறக்கம். இதென்ன இப்படி தூங்குகிறாய்? உன்னுடைய திறந்து பதில் சொல். பாழ்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமாலின் சிவ பக்தி பற்றி தெரியும் தானே? ஆழ்ந்த சயனத்தில் இருக்கும் அவரே சிவ பெருமானின் திருவடியை காண தேடி சென்றாரே.
ஊழியாகிய உலகம் அழியும் சமயத்திலும் அழியாமல் நின்ற ஒரே தலைவனாக இருக்கக் கூடியவனை, ஏழைகளுக்கு தோழனை போல் இருப்பவனை போற்றி பாடிட எங்களுடன் எழுந்து வா பெண்ணே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு
இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?
Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு
மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!
உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி
சந்தோஷம்!
{{comments.comment}}