தூத்துக்குடி: கனமழையில் சிக்கி தவித்து வந்த தூத்துக்குடி இன்று ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இன்னும் சில இடங்களில் வெள்ளம் வடியாமல் உள்ளது. அதையும் சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
சமீபத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. எங்கு பார்த்தாலும் மழை நீர் தேங்கி ஊரையே ஒரு வழியாக்கிவிட்டு சென்றுள்ளது. மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியினர்.
இந்த நிலையில், அரசு மற்றும் தன்னார்வலர்களும் சேர்ந்து மீட்பு பணிகளை செய்து வந்தனர். தூத்துக்குடியை மீட்க பல நாட்கள் ஆகும் என்றி எண்ணியிருந்த நிலையில், அரசு மற்றும் தன்னார்வலர்கள் சேர்ந்து மீட்பு பணிகளை விரைந்து செய்ததினால் இன்று தூத்துக்குடி ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. சில இடங்களில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தபோது கூட சில இடங்களில் அவர் வெள்ள நீரில்தான் இறங்கிச் செல்லும் நிலை இருந்தது.

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தில் 3 பேர் உயிரிழந்தாக கூடுதல் செயலாளர் மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையர் பிரபாகர் தெரிவித்துள்ளார். மழை வெள்ளத்தில் தூத்துக்குடி மாவட்டம் தனி தீவாக துண்டிக்கப்பட்டது. தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, கருங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களை மீட்பதற்காக ராணுவத்தினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலமாக உணவு பொட்டலங்கள் வழக்கப்பட்டன. இவ்வாறு பல்வேறு தரப்பினர்களின் முயற்சியால் தற்போது தூத்துக்குடி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
சாலை போக்குவரத்து , விமான சேவைகளும் தொடங்கப்பட்டு இயல்பு நிலைக்கு வந்துள்ளது. மக்களும் தங்கள் ஆன்றாட பணிகளை செய்யத் தொடங்கியுள்ளனர். வெள்ளம் வடியாத பகுதிகளில் மக்களுக்கு தேவையான உதவிகளை மீட்பு குழுவினர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}