இலை, தண்டு, வேர்.. எல்லாமே மருந்துதான்.. அழகான துத்திச் செடி.. செம ஹெல்த்தி!

Jan 06, 2026,09:47 AM IST

- வ. சரசுவதி சிவக்குமார்


துத்தி, இயற்கை அளித்த ஒரு அரிய மருத்துவப் பரிசு. இயற்கை மனிதனுக்குக் கொடுத்த மிகப்பெரிய வரம் தாவரங்களே. அவற்றில் ஒன்றாக விளங்குவது துத்தி தாவரம். தமிழ்நாட்டின் கிராமப்புறங்களிலும், வயல்வெளி ஓரங்களிலும், சாலையோரங்களிலும் எளிதாகக் காணப்படும் இந்தத் தாவரம், தோற்றத்தில் சாதாரணமாகத் தோன்றினாலும், மருத்துவப் பயன்களில் மிகச் சிறப்பிடம் பெறுகிறது.


துத்தி என்பது Malva இனத்தைச் சேர்ந்த ஒரு மூலிகைத் தாவரமாகும். மென்மையான தண்டு, அகலமான இலைகள், சிறிய ஊதா அல்லது இளஞ்சிவப்பு நிற மலர்கள் இதன் தனிச்சிறப்பாகும். மழைக்காலங்களில் அதிகமாக வளர்கிறது. எளிதில் வளரக்கூடிய தன்மை கொண்டதால், விவசாய நிலங்களிலும் வீட்டு தோட்டங்களிலும் இதை வளர்க்க முடியும்.

சித்த மருத்துவத்தில் துத்தி தாவரம் முக்கிய இடம் வகிக்கிறது. 




துத்தி இலைகள், தண்டு, வேர் ஆகிய அனைத்தும் மருத்துவப் பயன்களைக் கொண்டவை. குறிப்பாக உடல் வெப்பத்தைத் தணிக்க, மூத்திர எரிச்சலைக் குறைக்க, குடல் எரிச்சல் மற்றும் புண்களைச் சீர்செய்ய, வீக்கம் மற்றும் வலி குறைக்க துத்தி பயன்படுகிறது. இலைகளை அரைத்து பூசினால் தோல் எரிச்சல், வீக்கம் போன்றவை குறையும் என்பதும் மக்கள் மருத்துவத்தில் நன்கு அறியப்பட்ட உண்மை. முக்கியமாக மூலம் நோய்க்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.


துத்தி கீரை உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனை சமைத்து உண்ணுவதால் செரிமானம் சீராகும், மலச்சிக்கல் குறையும். உடலுக்குத் தேவையான சத்துக்களையும் நார்ச்சத்தையும் வழங்கும் தன்மை துத்தி கீரைக்குள்ளது. அதனால், கிராமப்புற மக்களின் உணவில் இது ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.


இன்றைய நவீன வாழ்க்கையில் மருந்துகளின் பக்கவிளைவுகள் குறித்து மக்கள் விழிப்புணர்வு பெற்றுவரும் நிலையில், துத்தி போன்ற மூலிகைத் தாவரங்களின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கிறது. எளிதில் கிடைக்கும், குறைந்த செலவில் பயன் தரும் இந்தத் தாவரத்தைப் பாதுகாத்து வளர்ப்பது நம் கடமையாகும்.


முடிவாக, தோற்றத்தில் எளிமையானதாக இருந்தாலும், பயன்களில் பெருமை கொண்ட துத்தி தாவரம், இயற்கை மனிதனுக்குக் கொடுத்த ஒரு அரிய மருத்துவச் செல்வமாகும். இதன் மதிப்பை உணர்ந்து, அடுத்த தலைமுறைக்கும் அதன் பயன்களை எடுத்துச் செல்ல வேண்டியது நம்முடைய பொறுப்பாகும்.


(சரசுவதி சிவக்குமார், திருமங்கலம், மதுரை. செள. பொட்டிப்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இடை நிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பல்வேறு தளங்களில் கவிதை, கட்டுரைகள் படைத்து வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்