இந்தியாவில் 3167 புலிகள்.. எண்ணிக்கை கிடுகிடு உயர்வு.. சென்சஸ் அறிக்கை வெளியீடு!

Apr 09, 2023,03:42 PM IST
மைசூரு: இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு சென்சஸ் கணக்குப்படி இந்தியாவில் 3167 புலிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள  புலிகளின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த சென்சஸ் கணக்கின் விவரங்களை பிரதமர் நரேந்திர மோடி, மைசூரில் நடந்த நிகழ்ச்சியில் இன்று வெளியிட்டார்.

அதன்படி 2022ம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 3167 ஆகும். கடந்த 2006ம் ஆண்டு வெறும் 1411 புலிகளே இருந்தன. இது 2010ம் ஆண்டு 1706 ஆக அதிகரித்தது. பின்னர் 2014ம் ஆண்டு 2226, 2018ம் ஆண்டு 2967 என்று இருந்தது. தற்போது மேலும் அதிகரித்து 3167 ஆக உயர்ந்துள்ளது.




மைசூரில் இந்தியாவின் புராஜக்ட் டைகர் திட்டத்தின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று தொடங்கின. இதுதொடர்பாக நடந்த விழாவில்தான் மேற்கொண்ட சென்சஸ் முடிவை அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. மேலும் அடுத்த 25 ஆண்டுகளில் புலிகள், சிங்கங்கள் உள்ளிட்டவற்றின் பாதுகாப்பு தொடர்பான  கொள்கைக் குறிப்பையும் பிரதமர் வெளியிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்திற்கு வந்திருந்தார். நேற்று தெலங்கானா மற்றும் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்த பிரதமர் இன்று கர்நாடகம் வந்தார். மைசூர் அருகே உள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்திற்கு அவர் பயணம் செய்து பார்வையிட்டார். பின்னர் தமிழ்நாட்டின் முதுமலையில் உள்ள யானைகள் முகாமுக்கு சென்று அங்கு ஆஸ்கர் விருது பெற்ற குறும்படத்தில் நடித்த யானை ரகுவை சந்தித்து மகிழ்ந்தார். அந்த யானையை பராமரித்து வரும் பொம்மன் - பெள்ளி தம்பதியையும் சந்தித்துப் பேசினார் பிரதமர் மோடி.

சமீபத்திய செய்திகள்

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்