சென்னை: திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளும், குலசை தசரா விழாவை முன்னிட்டு சென்னை, கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலம் என்பதால் மக்கள் கூட்டம் பேருந்து நிலையங்களில் அதிகளவில் காணப்படும். இதனால் பேருந்துகளின் கட்டணமும் அதிகமாக வசூலிக்கப்படும். இதில் இருந்து பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அவ்வப்போது சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போது திருப்பதி பிரம்மோற்சவம் மற்றும் குலசை தசரா விழாவிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தமிழகத்தின் முக்கிய பகுதிகளான சென்னை, திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகை, செங்கோட்டையில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அதேபோல், தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவையில் இருந்து திருச்செந்தூர் குலசைக்கு அக்டோபர் வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான டிக்கெட் முன்பதிவினை www.tnstc.in என்ற இணையதளத்தில் சிறப்பு பேருந்துகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மேலும் அக்டோபர் 3ம் தேதி வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!
இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு
நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்வி... வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியீடு!
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!
மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!
வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!
{{comments.comment}}