சென்னை: திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளும், குலசை தசரா விழாவை முன்னிட்டு சென்னை, கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலம் என்பதால் மக்கள் கூட்டம் பேருந்து நிலையங்களில் அதிகளவில் காணப்படும். இதனால் பேருந்துகளின் கட்டணமும் அதிகமாக வசூலிக்கப்படும். இதில் இருந்து பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அவ்வப்போது சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போது திருப்பதி பிரம்மோற்சவம் மற்றும் குலசை தசரா விழாவிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தமிழகத்தின் முக்கிய பகுதிகளான சென்னை, திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகை, செங்கோட்டையில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அதேபோல், தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவையில் இருந்து திருச்செந்தூர் குலசைக்கு அக்டோபர் வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான டிக்கெட் முன்பதிவினை www.tnstc.in என்ற இணையதளத்தில் சிறப்பு பேருந்துகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மேலும் அக்டோபர் 3ம் தேதி வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்
குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்
அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?
கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
{{comments.comment}}