- மஞ்சுளா தேவி
திருப்பதி: திருப்பதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் "ஜட்டி கேங்ஸ்டர்" என்ற கொள்ளை கும்பல், தொடர் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதாக திருப்பதி போலீஸார் எச்சரித்துள்ளனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு கார்த்திக் நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படம் வெளியானது. அது பல வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடந்த பயங்கர கொள்ளை மற்றும் கொலைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட படம்.
புறநகர்களில் தனித்து காணப்படும் வீடுகளில் புகுந்து கொடூரமாக கொலை செய்து விட்டு கொள்ளையடித்து வந்த வட மாநிலக் கும்பல் குறித்த படம் அது. நிஜமாக நடந்த பவேரியா கும்பலின் கொள்ளை, கொலைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்தே இது உருவாக்கப்பட்டது. தற்போது அதே பாணியிலான ஒரு அபாயகரமான கும்பல் திருப்பதி பக்கம் சுற்றி வருவதாக போலீஸார் எச்சரித்துள்ளனர்.
ஜட்டி கேங்ஸ்டர்ஸ் என்று அழைக்கப்படும் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஜட்டி மட்டுமே அணிந்து துணிகர கொள்ளைகளில் ஈடுபடுகின்றனர். கையில் கூர்மையான ஆயுதங்களை வைத்துள்ளனர். திருப்பதியில் ஆள் நடமாட்டம் இல்லாத புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் தொடர் கொள்ளை நடந்து வருகிறது. இதனை அறிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வந்தனர். இந்தத் தொடர் கொலை மற்றும் கொள்ளைக்கு காரணம் ஒரே கும்பல் தான் என்பதை கண்டறிந்தனர்.
ஜட்டி கேங்ஸ்டர் என்ற கொள்ளை கும்பல் முதலில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் நோட்டமிடுகின்றனர். மக்கள் தனியாக வசிக்கும் வீடுகளில் கதவை தட்டுகின்றனர். வீட்டில் இருப்பவர்கள் கதவை திறக்கின்றனர். மின்னல் வேகத்தில் அவர்களைத் தாக்கி வீடு புகுந்து திருடி விட்டு தப்பி விடுகின்றனர்.
ஜட்டி கேங்ஸ்டர் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர். இரவு நேரங்களில் புறநகர் பகுதியில் வசிக்கும் மக்கள் வித்தியாசமான சத்தம் கேட்டாலோ, காலிங் பெல் சத்தம் கேட்டாலோ யாரும் வெளியே செல்ல வேண்டாம் என திருப்பதி போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பதி மக்களுக்கு மட்டுமல்ல, நம்ம மக்களும் கூட இரவு நேரங்களில் யாராவது கதவைத் தட்டினால் உடனே திறக்கக் கூடாது. உஷாராக இருப்பது நல்லது.
சஞ்சய் தத்துக்கு இன்னொரு படம் பண்ணுவேன்.. அதுல மிஸ்டேக்கை சரி பண்ணிடுவேன் - லோகேஷ் கனகராஜ்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}