திருவண்ணாமலை.. தீப மலையின் உச்சியை அடைந்தது தீபம் ஏற்றும் ராட்சத கொப்பரை!

Dec 12, 2024,06:09 PM IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நாளை தீபமலை உச்சியில் தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ராட்சத கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் அதீத கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். குறிப்பாக திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் மலையின் பின்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. பாறைகள் உருண்டு வீடுகளின் மேல் விழுந்ததில் நான்கு சிறார்கள் உட்பட 7 பேர் மண் குவியலில் சிக்கி உயிரிழந்தனர். உயிரிழந்த 7 பேரையும் மீட்ட சம்பவம் காண்போரை பதைபதைக்க வைத்தது.



டிசம்பர் 13ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட வேண்டும். புயல் கன மழை காரணமாக, திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றும் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்ட நிலையில், தீபம் ஏற்ற செல்லும் நடைபாதையில் 500 மீட்டர் உயரம், 150 மீட்டர் அகலத்திற்கு செங்குத்தாக மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் முற்றிலும் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால் தீபம் ஏற்றப்படுமா? இல்லையா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. 

இதற்கு, பதில் அளிக்கும் விதமாக சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பேசுகையில், இந்த ஆண்டு மலை உச்சியில் தீபம் எரியும். திருவண்ணாமலை  மலை மீது தீபம் ஏற்ற சூழ்நிலைக்கு ஏற்ப மனித சக்தியை பயன்படுத்த உள்ளோம். 350 கிலோ கொப்பரை திரி 450 கிலோ நெய் சுமக்க தேவையான அளவு மனித சக்தியை பயன்படுத்தி எவ்வித அசம்பாவிதமும், உயிர்சேதமும் இன்றி தீபத்திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகா தீப திருவிழா நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.

தற்போது திட்டமிட்டபடி தீபம் ஏற்றுவதற்கான பணிகள் தொடங்கி விட்டன.  கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையில், நாளை மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்கு தேவையான கொப்பரைக்கு நேற்று சிறப்பு பூஜை செய்யப்பட்ட நிலையில், இன்று கொட்டும் மழையிலும் அதனை மலைக்கு கொண்டு செல்லும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். தற்போது மலை உச்சியை கொப்பரை அடைந்து விட்டது. இதனால், நாளை ஏற்றப்படும் மகா தீபத்தைக் காண பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்.. இன்று 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.. நாளை 5.. வானிலை மையம் தகவல்

news

பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் பேராபத்து.. உதயநிதி ஸ்டாலின் கருத்து

news

நடிகர் விஜய் இந்தியா கூட்டணியில் வந்து சேரலாம்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை யோசனை!

news

வெகுவிரைவில் மக்கள் திமுக ஆட்சியை புறக்கணிப்பார்கள்.. பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

news

இந்த வருடம் நாங்கள் ஏன் சர் ஜான் மார்ஷல் பொங்கல் என்று கொண்டாடினோம்?

news

Taste Atlas most hated foods 2025.. லிஸ்ட்டுல உப்புமா இல்லை.. பஞ்சாபி மிஸ்ஸி ரொட்டிக்கு 56வது இடம்!

news

சாம்பியன்ஸ் டிராபி 2025.. இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.. துணை கேப்டனானார் சுப்மன் கில்!

news

Budget 2025.. ஜன. 31 முதல் பிப். 13 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்.. பிப். 1ல் பட்ஜெட் தாக்கல்!

news

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பு மனுக்கள் ஏற்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்