திருவண்ணாமலை: திருவண்ணாமலை, வ.உ.சி. நகரில் பாறை உருண்டு விழுந்து மண் சரிவு ஏற்பட்ட வீட்டில் சிக்கிக் கொண்ட ஏழுபேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. பிஞ்சுக் குழந்தைகளின் உடல்களைப் பார்த்து அங்கிருந்தோர் கதறி அழுதனர்.
திருவண்ணாமலையில் நேற்று மிக கன மழை பெய்து ஊரையே வெள்ளக்காடாக்கி விட்டது. இந்த கன மழையின் காரணமாக, தீப மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகர் பகுதியில் ஒரு பெரிய பாறை உருண்டு வந்து 3 வீடுகளின் மீது விழுந்தது. மண் சரிவு காரணமாக அந்த வீடுகள் மண்ணில் புதைந்தன.

சம்பவத்தின்போது அந்த வீடுகளில் 7 பேர் வரை இருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து பாறையை அகற்றி வீட்டில் உள்ளவர்களை மீட்கும் முயற்சிகள் தொடங்கின. ஆனால் தொடர் மழையால் மீட்புப் பணிகள் தாமதமடைந்தன. மேலும் பாறையையும் அகற்ற முடியவில்லை. இதனால் வீட்டுக்குள் சிக்கிக் கொண்டவர்களின் நிலை குறித்த கவலை ஏற்பட்டது.
தொடர்ந்து மழை பெய்து வந்த போதிலும் கூட மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன. இந்த நிலையில் இன்று இரவு வாக்கில் கிட்டத்தட்ட 20 மணி நேரமாக நடந்த மீட்புப் பணியின் நிறைவாக 7 பேரின் உயிரற்ற உடல்களும் மீட்கப்பட்டன.
வீட்டுக்குள் சிக்கிக் கொண்டவர்கள் யார் யார்?
இந்தத் துயரச் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் விவரம் தெரிய வந்துள்ளது.
ராஜ்குமார் (32 )- மீனா (26 ), அவர்களது குழந்தைகள் கவுதம் (9), இனியா (7) மற்றும் உறவினர்களான மகா (12), வினோதினி (14), ரம்யா (12) ஆகியோரே வீட்டுக்குள் சிக்கிக் கொண்டவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இதில் ராஜ்குமார் உள்ளிட்ட 3 பேரின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் நடந்தபோது வீட்டுக்கு வெளியே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். மண் சரிவு ஏற்பட்டதும் பயந்து போய் அனைவரும் வீட்டுக்குள் ஓடி விட்டனர். அவர்கள் வெளியே ஓடி வந்திருந்தால் உயிர் தப்பியிருக்கக் கூடும். ஆனால் வீட்டுக்குள் போனதால் உள்ளே சிக்கிக் கொள்ள நேரிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Sanju Samson Century: சேப்பாக்கத்தில் சிறப்பான சம்பவம்.. பவுலிங்கிலும் கலக்கிய சிஎஸ்கே!
Rathi's Kitchen: நாக்கு சப்புக் கொட்டி சாப்பிட வைக்கும்.. நார்ச் சத்து மிகுந்த துவையல்!
Thangalakshmi Short Story: உண்மை என்பது இவ்வுலகில் இல்லை
1300 அடியார்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிகப் பயணம்!
செங்கற்களாலும்.. சிமென்ட்டாலும் மட்டும் ஆனதல்ல வீடு.. Bharatha Vilas!
நேரமாகி விட்டது.. சீக்கிரம் ரெடியாகி வா.. மெல்லிய பூங்காற்று.. (2)
Wonder Words: ஏன்.. எப்படி .. எதற்கு?.. விந்தையான வார்த்தைகள்!
நீங்களும் ஆகலாம்.. கலாம்.. அப்துல் கலாமின் காவியக் கவிதை!
இளம் படைப்பாளி!
{{comments.comment}}