திருவண்ணாமலையில் சோகம்.. மண் சரிவு ஏற்பட்ட வீட்டில் சிக்கிய ஏழு பேரின் உடல்களும் மீட்பு.. வேதனை!

Dec 02, 2024,06:01 PM IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, வ.உ.சி. நகரில் பாறை உருண்டு விழுந்து மண் சரிவு ஏற்பட்ட வீட்டில் சிக்கிக் கொண்ட ஏழுபேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. பிஞ்சுக் குழந்தைகளின் உடல்களைப் பார்த்து அங்கிருந்தோர் கதறி அழுதனர்.


திருவண்ணாமலையில் நேற்று மிக கன மழை பெய்து ஊரையே வெள்ளக்காடாக்கி விட்டது. இந்த கன மழையின் காரணமாக, தீப மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகர் பகுதியில் ஒரு பெரிய பாறை உருண்டு வந்து 3 வீடுகளின் மீது விழுந்தது. மண் சரிவு காரணமாக அந்த வீடுகள் மண்ணில் புதைந்தன.




சம்பவத்தின்போது அந்த வீடுகளில் 7 பேர் வரை இருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து பாறையை அகற்றி வீட்டில் உள்ளவர்களை மீட்கும் முயற்சிகள் தொடங்கின. ஆனால் தொடர் மழையால் மீட்புப் பணிகள் தாமதமடைந்தன. மேலும் பாறையையும் அகற்ற முடியவில்லை. இதனால் வீட்டுக்குள் சிக்கிக் கொண்டவர்களின் நிலை குறித்த கவலை ஏற்பட்டது.


தொடர்ந்து மழை பெய்து வந்த போதிலும் கூட மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன. இந்த நிலையில் இன்று இரவு வாக்கில் கிட்டத்தட்ட 20 மணி நேரமாக நடந்த மீட்புப் பணியின் நிறைவாக 7 பேரின் உயிரற்ற உடல்களும் மீட்கப்பட்டன. 


வீட்டுக்குள் சிக்கிக் கொண்டவர்கள் யார் யார்?


இந்தத் துயரச் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் விவரம் தெரிய வந்துள்ளது.


ராஜ்குமார் (32 )- மீனா (26 ), அவர்களது குழந்தைகள் கவுதம் (9), இனியா (7) மற்றும் உறவினர்களான மகா (12), வினோதினி (14), ரம்யா  (12) ஆகியோரே வீட்டுக்குள் சிக்கிக் கொண்டவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இதில் ராஜ்குமார் உள்ளிட்ட 3 பேரின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.


சம்பவம் நடந்தபோது வீட்டுக்கு வெளியே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். மண் சரிவு ஏற்பட்டதும் பயந்து போய் அனைவரும் வீட்டுக்குள் ஓடி விட்டனர். அவர்கள் வெளியே ஓடி வந்திருந்தால் உயிர் தப்பியிருக்கக் கூடும். ஆனால் வீட்டுக்குள் போனதால் உள்ளே சிக்கிக் கொள்ள நேரிட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய ரயில் டிக்கெட் கட்டணம்.. உங்க ஊருக்கு எவ்வளவு தெரியுமா?

news

என்ன வேணும் உனக்கு.. வாட்ஸ் ஆப் கொண்டு வந்த புது அப்டேட்.. இனி இதையும் பண்ணலாம்!

news

PMK issue: டெல்லி விரைந்தார் அன்புமணி.. அமித்ஷா, நட்டாவை சந்திக்க திட்டமா?.. மீண்டும் பாமக பரபரப்பு

news

கர்நாடக முதல்வரை மாற்ற திட்டமா.. மல்லிகார்ஜூன கார்கே சொன்ன பதில் இதுதான்!

news

Bihar model Road: 100 கோடியில் ரோடு.. ரோட்டு மேல காரு.. காரைச் சுத்தி யாரு?.. அடக் கொடுமையே!

news

ஆதார்-ஐஆர்சிடிசி அக்கவுண்ட் இணைக்க இன்றே கடைசி... தட்கல் டிக்கெட் எடுக்க புதிய ரூல்ஸ்

news

நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பது.. குழந்தை குடிக்கும் தாய்ப்பாலுக்கு வரிவிதிப்பதற்கு ஒப்பானது: சீமான்!

news

தொடர் குறைவில் தங்கம் விலை.... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

68 ஆண்டுகளுக்குப் பிறகு.. ஜூன் மாதத்தில் 120 அடியை தொட்டு அசத்திய மேட்டூர் அணை!

அதிகம் பார்க்கும் செய்திகள்