ஆளுநரின் தேநீர் விருந்து: தமிழக காங்கிரஸ் புறக்கணிப்பு!

Jan 05, 2026,08:37 PM IST

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கிண்டி ராஜ்பவனில் அளிக்கவுள்ள பாரம்பரிய தேநீர் விருந்தை  காங்கிரஸ் கட்சிப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.


குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, கவர்னர் மாளிகையில் அனைத்து கட்சிகளுக்கும் தேநீர் விருந்து வைக்க இருக்கிறார். இதனை முன்னிட்டு தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு கவர்னர் மாளிகை அழைப்பு விடுக்கும்.


இந்நிலையில், தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் நீடித்து வருகின்றன. ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்றது முதல் தமிழக அரசின் கொள்கைகளுக்கும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் எதிராகச் செயல்பட்டு வருவதாகவும்,  சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வது மற்றும் அவற்றை முடக்கி வைப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது எனவும், ஆளுநர் மாளிகை ஒரு அரசியல் அலுவலகம் போலச் செயல்படுவதாகவும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக ஆளுநர் கருத்துக்களைக் கூறி வருவதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.




இதனைடுத்து, இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மக்களால் பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் குடியரசு தினத்தன்று வழங்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து திமுகவின் மற்ற தோழமைக் கட்சிகளான விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் மதிமுக ஆகியவையும் இந்தத் தேநீர் விருந்தைப் புறக்கணிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

காரைக்குடியில் மக்கள் கூட்டத்திற்கு நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்...ஸ்தம்பித்த சாலைகள்

news

இணையத்தில் கசிந்த விஜய்யின் 'ஜனநாயகன்' சீன்ஸ்...ரசிகர்கள் கொதிப்பு

news

ஜனநாயகன் திரைப்படத்திற்காக முதல் ஆளாக குரல் கொடுத்த சிவகார்த்திகேயன்

news

மாம்பழம் சின்னத்தை முடக்கம்... ராமதாஸ் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

ஜனநாயகன் ரிலீசை தடுத்தது பாஜக.,வும், திமுக.,வும் தான்...ஆதவ் அர்ஜூனா பகிரங்க குற்றச்சாட்டு

news

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு: 3-வது மொழிப்பாட வகுப்புகளை உடனடியாகத் தொடங்க அறிவுறுத்தல்

news

ஒரு முடிவா… அல்லது ஒரு தொடக்கமா?.. மனிதன், இயந்திரம், மற்றும் எதிர்காலத்தின் தேர்வு (10)

news

National Siblings Day: ஒரு கூட்டுக் கிளியாக.. இன்று உடன் பிறப்புகள் தினம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்