ஆளுநரின் தேநீர் விருந்து: தமிழக காங்கிரஸ் புறக்கணிப்பு!

Jan 05, 2026,08:37 PM IST

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கிண்டி ராஜ்பவனில் அளிக்கவுள்ள பாரம்பரிய தேநீர் விருந்தை  காங்கிரஸ் கட்சிப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.


குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, கவர்னர் மாளிகையில் அனைத்து கட்சிகளுக்கும் தேநீர் விருந்து வைக்க இருக்கிறார். இதனை முன்னிட்டு தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு கவர்னர் மாளிகை அழைப்பு விடுக்கும்.


இந்நிலையில், தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் நீடித்து வருகின்றன. ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்றது முதல் தமிழக அரசின் கொள்கைகளுக்கும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் எதிராகச் செயல்பட்டு வருவதாகவும்,  சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வது மற்றும் அவற்றை முடக்கி வைப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது எனவும், ஆளுநர் மாளிகை ஒரு அரசியல் அலுவலகம் போலச் செயல்படுவதாகவும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக ஆளுநர் கருத்துக்களைக் கூறி வருவதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.




இதனைடுத்து, இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மக்களால் பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் குடியரசு தினத்தன்று வழங்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து திமுகவின் மற்ற தோழமைக் கட்சிகளான விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் மதிமுக ஆகியவையும் இந்தத் தேநீர் விருந்தைப் புறக்கணிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தாவுடா செவலை தாவு.. கட்சி விட்டு கட்சி தாவுவது.. நம்ம ஊரு அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

news

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் தமிழக முதல்வர் விஜய்.. நாளை டெல்லி பயணம்

news

கொளுத்துது வெயிலு.. தமிழ்நாட்டில் பள்ளித் திறப்பை ஒத்திவைக்க வலுக்கிறது கோரிக்கை

news

ADMK MLAs resignation: தொடரும் அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

news

செங்கல் சூலை உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய.. தவெக நிர்வாகி டிஸ்மிஸ் - விஜய் அதிரடி

news

பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி எரிவாயு விலை அதிரடி உயர்வு.. திகைப்பில் வாகன ஓட்டிகள்!

news

ஆஹா.. ஜென்ம சாபல்யம் நீங்கியது.. கண்டோம் பனி லிங்கத்தை.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 9)

news

தனிமைக் காதலன்.. எழுதுகோலுடன் என் பொழுதுகள்!

news

Sasikala Viswanathan: சந்தோசம்.. ஒரு 50 நொடிக் கதை!

அதிகம் பார்க்கும் செய்திகள்