சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வருவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் சிங்கப்பூர் சுற்றுலாவுக்கு தேர்வாகியுள்ள 42 மாணவர்களை சந்தித்து கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஓவிய கண்காட்சியை தொடங்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர்,
மும்மொழி கொள்கையை ஏற்றால் அடுத்த அரை மணி நேரத்தில் நிதியை விடுவிப்போம் என மத்திய அரசு நெருக்கடி கொடுக்கிறது.ஒன்றிய அரசு நெருக்கடி கொடுத்தாலும் பள்ளி கல்வித்துறை நிலுவைத் வைக்காமல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.நானே இந்தி அல்லாத மாநிலத்தில் தான் வந்திருக்கிறேன் என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகிறார். நீங்களும் இந்தியை ஏற்றுக் கொள்ளுங்கள் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வற்புறுத்துகிறார்.
இந்திய ஒன்றியத்திற்கு முன்மாதிரியாக கல்வியில் வளர்ச்சி அடைந்துள்ள தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தராமல் ஒன்றிய அரசு வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு வகையிலும் கல்வியில் சாதனை புரியும் நமது மாணவர் செல்வங்களையும் ஆசிரியர் பெருமக்களையும் ஒன்றிய அரசு ஏமாற்றி வருகின்றது.
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். எங்கள் பிள்ளைகளையும் ஆசிரியர் பெருமக்களையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்கள் மாணவர்களுக்கு என்ன மாதிரியான அறிவுசார் பயிற்சிகள் வழங்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம் என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}