சென்னை : 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மனுத் தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கல் :
2026ம் ஆண்டிற்கான தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30ம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது. இந்த முறை அதிகமான விடுமுறை நாட்கள் வந்ததால் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு மிக குறைவான நாட்களே அவகாசமாக அளிக்கப்பட்டது. மார்ச் 31, ஏப்ரல் 02, ஏப்ரல் 04, ஏப்ரல் 06 ஆகிய நான்கு நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. வேட்புமனு தாக்கலின் முதல் நாளிலேயே 234 தொகுதிகளிலும் 251 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இறுதி வேட்பாளர் பட்டியல் :

தமிழகம் முழுவதும் இதுவரை 1000க்கும் அதிகமான வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இன்று பகல் 3 மணி வரை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் இருந்தது. இதன் காரணமாக இன்று அதிகமானவர்கள் மனுத்தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
கடைசி நாளான இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதுவரை தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் அனைத்தும் ஏப்ரல் 07ம் தேதியான நாளை பரிசீலிக்கப்படும். வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் ஏப்ரல் 09ம் தேதியாகும். அன்று மாலை 5 மணிக்கு பிறகு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட உள்ளது.
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபடுவார்கள். களம் தெளிவாகும் என்பதால் அதற்கு பிறகு யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பாக மக்களுக்கும் தெளிவு ஏற்படும். ஏப்ரல் 21ம் தேதி இரவு 10 மணியுடன் தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடையும். ஏப்ரல் 23ம் தேதியன்று பதிவாகும் ஓட்டுக்கள் மே 04ம் தேதியன்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.
Rathi's Kitchen: நாக்கு சப்புக் கொட்டி சாப்பிட வைக்கும்.. நார்ச் சத்து மிகுந்த துவையல்!
கனவுகள் மெய்ப்படும்!
Wonder Words: ஏன்.. எப்படி .. எதற்கு?.. விந்தையான வார்த்தைகள்!
பலவண்ணம்!
எதிர்பாராமல் கிடைத்த உதவிக்கு என்றுமே கடமைப்படு!
Thangalakshmi Short Story: உண்மை என்பது இவ்வுலகில் இல்லை
காரைக்குடியில் மக்கள் கூட்டத்திற்கு நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்...ஸ்தம்பித்த சாலைகள்
இணையத்தில் கசிந்த விஜய்யின் 'ஜனநாயகன்' சீன்ஸ்...ரசிகர்கள் கொதிப்பு
ஜனநாயகன் திரைப்படத்திற்காக முதல் ஆளாக குரல் கொடுத்த சிவகார்த்திகேயன்
{{comments.comment}}