சென்னை : ஃபெங்கல் புயலை தீவிர இயற்கை பேரிடராக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
வங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, கடலிலேயே நிலை கொண்டு, பிறகு புயலாக மாறியது. இதற்கு ஃபெஞ்சல் என பெயரிடப்பட்டது. இந்த புயல் கரையை கடக்கும் போது நவம்பர் 30ம் தேதி பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக விழுப்புரம், புதுச்சேரியில் மிக அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த பகுதிகளில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக கனமழை கொட்டி தீர்த்தது. இதில் பல பகுதிகளில் நீரில் மூழ்கின.
விழுப்புரம் மாவட்டத்தில் கீழ் தளம் முழுவதும் நீரில் மூழ்கியதால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் இழந்து மக்கள் கடுமையான அவதிக்கு ஆளாகினர். பல பகுதிகளில் தேங்கிய மழை நீர் வடிவதற்கே பல வாரங்கள் ஆகியன. ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் பல பகுதிகளில் இயல்பு நிலை திரும்பாத நிலையே உள்ளது. இந்நிலையில் புயல் பாதிப்பை சீர் செய்ய தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் நிதி கேட்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மத்திய குழு தமிழகம் வந்து ஆய்வு நடத்தியது.
இந்நிலையில் ஃபெங்கல் புயலை தீவிர இயற்கை பேரிடமாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அரசிதழிலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் பேரிடர் நிதியுடன் மற்ற நிதிகளையும் சீரமைப்பு பணிக்கு பயன்படுத்த முடியும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு
தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!
எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு
அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்..!
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்
{{comments.comment}}