சென்னை : ஃபெங்கல் புயலை தீவிர இயற்கை பேரிடராக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
வங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, கடலிலேயே நிலை கொண்டு, பிறகு புயலாக மாறியது. இதற்கு ஃபெஞ்சல் என பெயரிடப்பட்டது. இந்த புயல் கரையை கடக்கும் போது நவம்பர் 30ம் தேதி பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக விழுப்புரம், புதுச்சேரியில் மிக அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த பகுதிகளில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக கனமழை கொட்டி தீர்த்தது. இதில் பல பகுதிகளில் நீரில் மூழ்கின.
விழுப்புரம் மாவட்டத்தில் கீழ் தளம் முழுவதும் நீரில் மூழ்கியதால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் இழந்து மக்கள் கடுமையான அவதிக்கு ஆளாகினர். பல பகுதிகளில் தேங்கிய மழை நீர் வடிவதற்கே பல வாரங்கள் ஆகியன. ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் பல பகுதிகளில் இயல்பு நிலை திரும்பாத நிலையே உள்ளது. இந்நிலையில் புயல் பாதிப்பை சீர் செய்ய தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் நிதி கேட்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மத்திய குழு தமிழகம் வந்து ஆய்வு நடத்தியது.
இந்நிலையில் ஃபெங்கல் புயலை தீவிர இயற்கை பேரிடமாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அரசிதழிலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் பேரிடர் நிதியுடன் மற்ற நிதிகளையும் சீரமைப்பு பணிக்கு பயன்படுத்த முடியும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விஜய்யை மட்டும் தொடர்ந்து குறி வைத்து விமர்சிக்கும் சீமான்... லேட்டஸ்ட் விளாசல் இதோ!
கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போகிறேன்: முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!
திமுக அரசின் மோசடிக்கு அளவே இல்லையா? அன்புமணி ராமதாஸ் காட்டம்!
நாடு முழுவதும் பட்டாசைத் தடை பண்ணுங்க.. அது ஏன் டெல்லிக்கு மட்டும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து
விஜய் நா வரேன், வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு: தவெகவின் பிரசார லோகோ வெளியீடு!
வன்னியர் சங்கத்துக்கு பூட்டு.. ராமதாஸ் அன்புமணி - ஆதரவாளர்கள் இடையே மோதல்
அப்பனே விநாயகா.. இன்னிக்கு வடிவேலுவுக்குப் பொறந்த நாளு.. வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க வாழ்த்துங்க!
துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.. தமிழ்நாட்டின் புதிய பெருமை
ஆதரவற்றோர் இல்லம், இலவச கல்வி.. சத்தமில்லாமல் சாதனை படைக்கும் ராகவா லாரன்ஸ்
{{comments.comment}}