சென்னை : ஃபெங்கல் புயலை தீவிர இயற்கை பேரிடராக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
வங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, கடலிலேயே நிலை கொண்டு, பிறகு புயலாக மாறியது. இதற்கு ஃபெஞ்சல் என பெயரிடப்பட்டது. இந்த புயல் கரையை கடக்கும் போது நவம்பர் 30ம் தேதி பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக விழுப்புரம், புதுச்சேரியில் மிக அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த பகுதிகளில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக கனமழை கொட்டி தீர்த்தது. இதில் பல பகுதிகளில் நீரில் மூழ்கின.
விழுப்புரம் மாவட்டத்தில் கீழ் தளம் முழுவதும் நீரில் மூழ்கியதால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் இழந்து மக்கள் கடுமையான அவதிக்கு ஆளாகினர். பல பகுதிகளில் தேங்கிய மழை நீர் வடிவதற்கே பல வாரங்கள் ஆகியன. ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் பல பகுதிகளில் இயல்பு நிலை திரும்பாத நிலையே உள்ளது. இந்நிலையில் புயல் பாதிப்பை சீர் செய்ய தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் நிதி கேட்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மத்திய குழு தமிழகம் வந்து ஆய்வு நடத்தியது.
இந்நிலையில் ஃபெங்கல் புயலை தீவிர இயற்கை பேரிடமாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அரசிதழிலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் பேரிடர் நிதியுடன் மற்ற நிதிகளையும் சீரமைப்பு பணிக்கு பயன்படுத்த முடியும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 02, 2025... இன்று பணவரவை பெற போகும் ராசிக்காரர்கள்
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்
Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!
ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!
தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு
வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!
வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!
{{comments.comment}}