ஃபெங்கல் புயல் தீவிர பேரிடர்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு.. கெஜட்டிலும் அறிவிக்கை வெளியானது

Jan 04, 2025,07:14 PM IST

சென்னை : ஃபெங்கல் புயலை தீவிர இயற்கை பேரிடராக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.


வங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, கடலிலேயே நிலை கொண்டு, பிறகு புயலாக மாறியது. இதற்கு ஃபெஞ்சல் என பெயரிடப்பட்டது. இந்த புயல் கரையை கடக்கும் போது நவம்பர் 30ம் தேதி பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக விழுப்புரம், புதுச்சேரியில் மிக அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த பகுதிகளில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக கனமழை கொட்டி தீர்த்தது. இதில் பல பகுதிகளில் நீரில் மூழ்கின.




விழுப்புரம் மாவட்டத்தில் கீழ் தளம் முழுவதும் நீரில் மூழ்கியதால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் இழந்து மக்கள் கடுமையான அவதிக்கு ஆளாகினர். பல பகுதிகளில் தேங்கிய மழை நீர் வடிவதற்கே பல வாரங்கள் ஆகியன. ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் பல பகுதிகளில் இயல்பு நிலை திரும்பாத நிலையே உள்ளது. இந்நிலையில் புயல் பாதிப்பை சீர் செய்ய தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் நிதி கேட்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மத்திய குழு தமிழகம் வந்து ஆய்வு நடத்தியது.


இந்நிலையில் ஃபெங்கல் புயலை தீவிர இயற்கை பேரிடமாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அரசிதழிலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் பேரிடர் நிதியுடன் மற்ற நிதிகளையும் சீரமைப்பு பணிக்கு பயன்படுத்த முடியும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்