சென்னை : ஆகஸ்ட் 12ம் தேதி தாயுமானவர் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். இந்த திட்டம் குறித்த அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சென்னையில் ஆகஸ்ட் 12ம் தேதி முதல்வர் துவக்கி வைக்க உள்ளார்.70 தயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாறுத்திறனாளிகள் வீட்டிற்கே சென்று ரேசன் பொருட்கள் விநியோகம் செய்ய இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தால் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பேர் பயன்பெறுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சுகாதாரத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் கடந்த வாரம் துவங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக பொது விநியோக துறையின் சார்பில் தாயுமானவர் திட்டம் துவங்கப்பட உள்ளது. இதனால் மூத்த குடிமக்கள் பலர் பயனடைவார்கள் என சொல்லப்படுகிறது.
தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக தலைமையிலான அரசின் பதவிக்காலம் நிறைவடைய இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலையில் மக்கள் நலத்திட்டங்கள் பலவும் அடுத்தடுத்து செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}