சென்னை : ஆகஸ்ட் 12ம் தேதி தாயுமானவர் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். இந்த திட்டம் குறித்த அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சென்னையில் ஆகஸ்ட் 12ம் தேதி முதல்வர் துவக்கி வைக்க உள்ளார்.70 தயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாறுத்திறனாளிகள் வீட்டிற்கே சென்று ரேசன் பொருட்கள் விநியோகம் செய்ய இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தால் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பேர் பயன்பெறுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சுகாதாரத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் கடந்த வாரம் துவங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக பொது விநியோக துறையின் சார்பில் தாயுமானவர் திட்டம் துவங்கப்பட உள்ளது. இதனால் மூத்த குடிமக்கள் பலர் பயனடைவார்கள் என சொல்லப்படுகிறது.
தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக தலைமையிலான அரசின் பதவிக்காலம் நிறைவடைய இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலையில் மக்கள் நலத்திட்டங்கள் பலவும் அடுத்தடுத்து செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு
இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?
Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு
மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!
உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி
சந்தோஷம்!
{{comments.comment}}