ஆகஸ்ட் 12ல் தாயுமானவர் திட்டம் துவக்கம்...யாருக்கு இந்த திட்டம்?

Aug 08, 2025,10:25 AM IST

சென்னை : ஆகஸ்ட் 12ம் தேதி தாயுமானவர் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். இந்த திட்டம் குறித்த அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சென்னையில் ஆகஸ்ட் 12ம் தேதி முதல்வர் துவக்கி வைக்க உள்ளார்.70 தயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாறுத்திறனாளிகள் வீட்டிற்கே சென்று ரேசன் பொருட்கள் விநியோகம் செய்ய இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தால் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பேர் பயன்பெறுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 




ஏற்கனவே சுகாதாரத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் கடந்த வாரம் துவங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக பொது விநியோக துறையின் சார்பில் தாயுமானவர் திட்டம் துவங்கப்பட உள்ளது. இதனால் மூத்த குடிமக்கள் பலர் பயனடைவார்கள் என சொல்லப்படுகிறது.


தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக தலைமையிலான அரசின் பதவிக்காலம் நிறைவடைய இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலையில் மக்கள் நலத்திட்டங்கள் பலவும் அடுத்தடுத்து செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து

news

கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு

news

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்