சென்னை: தீபாவளியை மக்கள் பாதுகாப்பாகவும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையிலும் கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் இன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதனால் மக்கள் உற்சாகமாக அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து உற்சாகமாக கொண்டாட்டங்களில் இறங்கியுள்ளனர். காலை 6 மணி முதல் 7 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி உண்டு என்பதால் காலையிலேயே பட்டாசுச் சத்தம் காதுகளைத் துளைத்தது. அதேபோல இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி உண்டு.
இந்த நிலையில் தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு தமிழ்நாடு அரசு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
காலை 6 மணி முதல் ஏழு மணி வரையிலும் இரவு ஏழு மணி முதல் 8:00 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக்காக்க, பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும் குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.
மருத்துவமனைகள் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசை ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களை கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு சென்னைப் பெருநகர மாநகராட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}