Happy Deepavali: பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுங்கள்.. பசுமைப் பட்டாசுகளை வெடியுங்கள்.. தமிழ்நாடு அரசு

Oct 31, 2024,11:02 AM IST

சென்னை: தீபாவளியை மக்கள் பாதுகாப்பாகவும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையிலும் கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.


தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் இன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதனால் மக்கள் உற்சாகமாக அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து உற்சாகமாக கொண்டாட்டங்களில் இறங்கியுள்ளனர். காலை 6 மணி முதல் 7 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி உண்டு என்பதால் காலையிலேயே பட்டாசுச் சத்தம் காதுகளைத் துளைத்தது. அதேபோல இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி உண்டு.


இந்த நிலையில் தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு தமிழ்நாடு அரசு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:




காலை 6 மணி முதல் ஏழு மணி வரையிலும் இரவு ஏழு மணி முதல் 8:00 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.


சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக்காக்க,  பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும் குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.


அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.


மருத்துவமனைகள் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.


குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.


பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசை ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களை கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு சென்னைப் பெருநகர மாநகராட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்