சென்னை: தீபாவளியை மக்கள் பாதுகாப்பாகவும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையிலும் கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் இன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதனால் மக்கள் உற்சாகமாக அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து உற்சாகமாக கொண்டாட்டங்களில் இறங்கியுள்ளனர். காலை 6 மணி முதல் 7 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி உண்டு என்பதால் காலையிலேயே பட்டாசுச் சத்தம் காதுகளைத் துளைத்தது. அதேபோல இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி உண்டு.
இந்த நிலையில் தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு தமிழ்நாடு அரசு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

காலை 6 மணி முதல் ஏழு மணி வரையிலும் இரவு ஏழு மணி முதல் 8:00 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக்காக்க, பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும் குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.
மருத்துவமனைகள் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசை ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களை கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு சென்னைப் பெருநகர மாநகராட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}