சென்னை: தீபாவளியை மக்கள் பாதுகாப்பாகவும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையிலும் கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் இன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதனால் மக்கள் உற்சாகமாக அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து உற்சாகமாக கொண்டாட்டங்களில் இறங்கியுள்ளனர். காலை 6 மணி முதல் 7 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி உண்டு என்பதால் காலையிலேயே பட்டாசுச் சத்தம் காதுகளைத் துளைத்தது. அதேபோல இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி உண்டு.
இந்த நிலையில் தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு தமிழ்நாடு அரசு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

காலை 6 மணி முதல் ஏழு மணி வரையிலும் இரவு ஏழு மணி முதல் 8:00 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக்காக்க, பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும் குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.
மருத்துவமனைகள் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசை ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களை கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு சென்னைப் பெருநகர மாநகராட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}