சென்னை: தமிழ்நாட்டில் செப்டம்பர் 17ம் தேதிதான் மிலாது நபி கொண்டாடப்படவுள்ளதால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 16ம் தேதிக்குப் பதில் 17ம் தேதி விடுமுறை விடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
முஸ்லீம் சமுதாயத்தினரின் முக்கிய விழாக்களில் ஒன்று மிலாடி நபி. அதாவது நபிகள் நாயகத்தின் பிறந்த நாள்தான் மிலாடி நபியாக கொண்டாடப்படுகிறது.
மிலாடி நபியையொட்டி மத்திய அரசு தனது அலுவலகங்களுக்கு செப்டம்பர் 17ம் தேதியை ஏற்கனவே விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. அன்றைய தினம் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் செப்டம்பர் 16ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அன்றைய தினம் தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. ஆனால் தற்போது 17ம் தேதிதான் மிலாடி நபி கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜியார் அறிவித்துள்ளார். இதையடுத்து தமிழ்நாடு அரசு தனது விடுமுறையை 17ம் தேதி மாற்றி அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}