சென்னை: வாக்காளர் பட்டியலின் வரைவுப் படிவத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தீவிர திருத்த (SIR) பணிகளுக்கான உரிமை கோரல் மற்றும் ஆட்சேபனை தெரிவிக்கும் கால அவகாசம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. ஒரு மாதம் நடைபெற்ற இந்த முகாம்களில், பெயர் சேர்ப்பிற்காக 12.80 லட்சம் விண்ணப்பங்கள் இதுவரை பெறப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது இதற்கான அவகாசத்தை ஜனவரி 30ம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு மாத கால அவகாசம் மற்றும் நான்கு நாட்கள் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் இருந்த போதிலும், எதிர்பார்த்த அளவிற்கான விண்ணப்பங்கள் வரவில்லை. ஏற்கனவே வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியலில் சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், இந்த புதிய சேர்க்கை எண்ணிக்கை குறைவாகவே கருதப்படுகிறது. இந்த கணக்கெடுப்புப் பணிக்கு பிறகு, தமிழகத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.41 கோடியிலிருந்து 5.43 கோடியாகக் குறைந்துள்ளது. இதில் சுமார் 27 லட்சம் பேர் உயிரிழந்ததன் காரணமாக நீக்கப்பட்டுள்ளனர்.

வரைவுப் பட்டியலில் பெயர் இல்லாத வாக்காளர்கள், SIR செயல்முறை முடிந்த பின்னரும் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். சுமார் 12 லட்சம் வாக்காளர்கள் "இணைக்கப்படாத வாக்காளர்களாக" (unmapped voters) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருப்பிடச் சான்றுடன் உரிய படிவத்தைச் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சரிபார்ப்புப் பணிகள் பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திருத்தப் பணியில் அங்கீகரிக்கப்பட்ட 12 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 2.72 லட்சம் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLAs) பங்கேற்றனர். இதில் ஆளுங்கட்சியான திமுக அதிகபட்சமாக 68,280 முகவர்களையும், அதிமுக 67,286 முகவர்களையும், பாஜக 61,438 முகவர்களையும் களமிறக்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான அவகாசம் ஜனவரி 18ம் தேதியான நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பிப்ரவரி 10-ஆம் தேதி சரிபார்ப்புப் பணிகள் முடிவடைந்த பின், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியிடப்படுமா அல்லது அதில் மாற்றம் வருமா என்று தெரியவில்லை.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}