சென்னை: ஆங்கிலத்தில் மருத்துவம் பயின்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை. வடநாடுகளில், மாட்டை வைத்து, கலவரம் செய்து அரசியல் ஆதாயம் தேடியது போல இங்கேயும் மாட்டரசியல் செய்ய வேண்டாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.
மாட்டின் சிறுநீர் அதாவது கோமியம், தமிழ்நாட்டில் பேசு பொருளாகியுள்ளது. சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கோமியம் குடிப்பதை ஆதரித்தும், தனது தந்தையின் காய்ச்சல் கோமியம் குடித்ததால் சரியானதாகவும் கூறியது சர்ச்சையானது. பல்வேறு கட்சிகளுக்கும் அவருக்குக் கண்டனம் தெரிவித்தன.
இதுகுறித்து செய்தியாளர்கள் அவரிடம் விளக்கம் கேட்டபோது, பஞ்சகவ்யம் என்பது நிரூபிக்கப்பட்டது. இதற்கு அறிவியல் பூர்வ ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக தெரிவித்தார். இதனால் விவாதம் மேலும் வலுத்துள்ளது.
காமகோடி கூறியதை ஆதரித்து முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் இன்று கருத்து தெரிவித்துள்ளார். மாட்டு இறைச்சியை சாப்பிடுகிறார்கள். ஆனால் கோமியம் என்றதும் ஏன் அரசியலாக்குகிறார்கள். மாட்டின் கோமியம் ஆயுர்வேதத்தில் ஒரு மருந்து. அது 80 வகையான நோய்களை குணப்படுத்துவதாக கூறுகிறார்கள். அதில் காய்ச்சலும் ஒன்றாக இருக்கலாம் என்று கூறினார் தமிழிசை.
இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ஆங்கிலத்தில் மருத்துவம் பயின்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை. ஆயுர்வேதத்தில் இருக்கிறது என்பதால், கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையும் நம்ப வேண்டுமா?
மாட்டின் கழிவு நீரான சிறுநீரை அமிர்தநீர் என்று பாஜகவில் உள்ளவர்களால்தான் சொல்லமுடியும். இவர்கள் இவ்வாறு சொல்லாவிட்டால்தான் அதிசயம். இதுபோன்ற அமிர்தநீர் ஆராய்ச்சி கொண்ட கருத்துகளை இவர்கள் வெளிநாடுகள் செல்லும் போது சொல்லமுடியுமா?
வடநாடுகளில், மாட்டை வைத்து, கலவரம் செய்து அரசியல் ஆதாயம் தேடியது போல இங்கேயும் மாட்டரசியல் செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளார் செல்வப் பெருந்தகை.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு பணியாது... நாம் ஒன்றாக எழுவோம்.. இது ஓரணி vs டெல்லி அணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை: டாக்டர் அன்புமணி!
என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்
அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்.. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு
ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
சாதனை இந்தியர் சுபான்ஷு சுக்லா.. 14ம் தேதி பூமி திரும்புகிறார்.. தடபுடலாக வரவேற்கத் தயாராகும் நாசா!
தேனியில் விவசாயிகளுடன் இணைந்து ஆடு மாடு மேய்ப்பேன்.. சீமானின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு!
அதிவேக இணையத்தில் ஜப்பான் புதிய உலக சாதனை.. இந்தியாவை விட 16 மில்லியன் மடங்கு அதிகம்!
ஆட்சித்திறனுக்காக நோபல் பரிசு தந்தால் அதை எனக்குத் தரலாம்.. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி
{{comments.comment}}