சென்னை: ஆங்கிலத்தில் மருத்துவம் பயின்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை. வடநாடுகளில், மாட்டை வைத்து, கலவரம் செய்து அரசியல் ஆதாயம் தேடியது போல இங்கேயும் மாட்டரசியல் செய்ய வேண்டாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.
மாட்டின் சிறுநீர் அதாவது கோமியம், தமிழ்நாட்டில் பேசு பொருளாகியுள்ளது. சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கோமியம் குடிப்பதை ஆதரித்தும், தனது தந்தையின் காய்ச்சல் கோமியம் குடித்ததால் சரியானதாகவும் கூறியது சர்ச்சையானது. பல்வேறு கட்சிகளுக்கும் அவருக்குக் கண்டனம் தெரிவித்தன.
இதுகுறித்து செய்தியாளர்கள் அவரிடம் விளக்கம் கேட்டபோது, பஞ்சகவ்யம் என்பது நிரூபிக்கப்பட்டது. இதற்கு அறிவியல் பூர்வ ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக தெரிவித்தார். இதனால் விவாதம் மேலும் வலுத்துள்ளது.

காமகோடி கூறியதை ஆதரித்து முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் இன்று கருத்து தெரிவித்துள்ளார். மாட்டு இறைச்சியை சாப்பிடுகிறார்கள். ஆனால் கோமியம் என்றதும் ஏன் அரசியலாக்குகிறார்கள். மாட்டின் கோமியம் ஆயுர்வேதத்தில் ஒரு மருந்து. அது 80 வகையான நோய்களை குணப்படுத்துவதாக கூறுகிறார்கள். அதில் காய்ச்சலும் ஒன்றாக இருக்கலாம் என்று கூறினார் தமிழிசை.
இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ஆங்கிலத்தில் மருத்துவம் பயின்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை. ஆயுர்வேதத்தில் இருக்கிறது என்பதால், கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையும் நம்ப வேண்டுமா?
மாட்டின் கழிவு நீரான சிறுநீரை அமிர்தநீர் என்று பாஜகவில் உள்ளவர்களால்தான் சொல்லமுடியும். இவர்கள் இவ்வாறு சொல்லாவிட்டால்தான் அதிசயம். இதுபோன்ற அமிர்தநீர் ஆராய்ச்சி கொண்ட கருத்துகளை இவர்கள் வெளிநாடுகள் செல்லும் போது சொல்லமுடியுமா?
வடநாடுகளில், மாட்டை வைத்து, கலவரம் செய்து அரசியல் ஆதாயம் தேடியது போல இங்கேயும் மாட்டரசியல் செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளார் செல்வப் பெருந்தகை.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
உருவம் முக்கியமல்ல, கடமையே முக்கியம்.. Conversation between minute and hour
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
What is yourss is Yours.. உனக்கானது உன்னை வந்தடையும்!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
Porselvi Rajan Tamil Poem: வெயிலோடு விளையாடி!
Deepa Ravi Poem: வேறெதுவும் தேவையில்லை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
{{comments.comment}}