குரூப் 2 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு.. முறைகேட்டில் ஈடுபட்டால்.. 3 ஆண்டுகள் தேர்வு எழுத முடியாது!

Sep 04, 2024,11:06 AM IST

சென்னை: குரூப் 2 முதன்மை தேர்வுகள் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், போட்டி தேர்வுகளில் தேர்வு எழுதுவோர் முறைகேட்டில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என டிஎன்பிசி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


டிஎன்பிசி சார்பில் அரசு பணிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப குரூப் 1, குரூப் 2 மற்றும் 2ஏ, குரூப் 3, குரூப் 4 ஆகிய போட்டிகள் தேர்வுகள் தமிழ்நாட்டு தேர்வாணையத்தால் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2a வில் உள்ள மொத்தம் 2327 காலி பணியிடங்கள் உள்ளதாக டிஎன்பிஎஸ்சி  அறிவிப்புகளை வெளியிட்டது.




இந்த குரூப் 2 மற்றும் 2 ஏ மூலம் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர், வனவர், உதவிப் பிரிவு அலுவலர் மற்றும் நிரலர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி ஜூலை 19ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதற்கான முதன்மை போட்டித் தேர்வுகள் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.


இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2a தேர்வு எழுதுபவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்