குரூப் 2 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு.. முறைகேட்டில் ஈடுபட்டால்.. 3 ஆண்டுகள் தேர்வு எழுத முடியாது!

Sep 04, 2024,11:06 AM IST

சென்னை: குரூப் 2 முதன்மை தேர்வுகள் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், போட்டி தேர்வுகளில் தேர்வு எழுதுவோர் முறைகேட்டில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என டிஎன்பிசி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


டிஎன்பிசி சார்பில் அரசு பணிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப குரூப் 1, குரூப் 2 மற்றும் 2ஏ, குரூப் 3, குரூப் 4 ஆகிய போட்டிகள் தேர்வுகள் தமிழ்நாட்டு தேர்வாணையத்தால் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2a வில் உள்ள மொத்தம் 2327 காலி பணியிடங்கள் உள்ளதாக டிஎன்பிஎஸ்சி  அறிவிப்புகளை வெளியிட்டது.




இந்த குரூப் 2 மற்றும் 2 ஏ மூலம் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர், வனவர், உதவிப் பிரிவு அலுவலர் மற்றும் நிரலர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி ஜூலை 19ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதற்கான முதன்மை போட்டித் தேர்வுகள் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.


இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2a தேர்வு எழுதுபவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமைச்சர் உறுதிமொழியை ஏற்று.. இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

news

யாரையும் ஜெயிக்க வைக்க நான் வரலை.. நான் ஜெயிக்க வந்திருக்கேன்.. விஜய் அதிரடி

news

ஆசிரியர்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு தான் காரணம்: அண்ணாமலை

news

கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேட்டி

news

வெள்ளி விலை ஒரே நாளில் இருமுறை வீழ்ச்சி: என்ன நடந்தது?

news

தங்கம் விலை நேற்றைய விலையைத் தொடர்ந்து இன்றும் குறைவு... எவ்வளவு குறைவு தெரியுமா?

news

பாமக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்...கட்சிப் பிளவுக்கு மத்தியில் ராமதாஸ் அதிரடி

news

கர்நாடகாவின் பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபர் சி.ஜே. ராய் எடுத்த விபரீத முடிவு!

news

மத்திய பட்ஜெட் 2026: எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எவற்றில் விலை அதிகரிக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்