சென்னை: குரூப் 2 முதன்மை தேர்வுகள் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், போட்டி தேர்வுகளில் தேர்வு எழுதுவோர் முறைகேட்டில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என டிஎன்பிசி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டிஎன்பிசி சார்பில் அரசு பணிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப குரூப் 1, குரூப் 2 மற்றும் 2ஏ, குரூப் 3, குரூப் 4 ஆகிய போட்டிகள் தேர்வுகள் தமிழ்நாட்டு தேர்வாணையத்தால் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2a வில் உள்ள மொத்தம் 2327 காலி பணியிடங்கள் உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்புகளை வெளியிட்டது.

இந்த குரூப் 2 மற்றும் 2 ஏ மூலம் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர், வனவர், உதவிப் பிரிவு அலுவலர் மற்றும் நிரலர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி ஜூலை 19ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதற்கான முதன்மை போட்டித் தேர்வுகள் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2a தேர்வு எழுதுபவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
லட்சியக் கனவை முன்னின்று நிறைவேற்றப் போவது நீங்கதான்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து
அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. நீங்க யாரும் ஹர்ட் ஆகாதீங்க.. தவெக தலைவர் விஜய்
கோவையை அதிர வைத்த.. மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. 3 பேருக்கும் சாகும் வரை சிறைத் தண்டனை!
தமிழக சட்டசபை தேர்தல் 2026 விஐபி தொகுதிகள்...எந்த தொகுதியில் யார் போட்டியிட வாய்ப்பு?
இந்தியா உதவியது ஏன்?... வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
கேஸ் சிலிண்டர் விலை உயர்விற்கு திமுக தான் காரணம்...அண்ணாமலை சொன்ன காரணம்
ஈரான் போர் எப்பதான் முடியும்.. ஏன் இந்த சண்டை.. அடுத்து என்னதான் நடக்கும்?
வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு
ஓம்பிர்லாவை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்: மார்ச் 9 அன்று லோக்சபாவில் முக்கிய நகர்வு
{{comments.comment}}