சென்னை: குரூப் 2 முதன்மை தேர்வுகள் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், போட்டி தேர்வுகளில் தேர்வு எழுதுவோர் முறைகேட்டில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என டிஎன்பிசி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டிஎன்பிசி சார்பில் அரசு பணிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப குரூப் 1, குரூப் 2 மற்றும் 2ஏ, குரூப் 3, குரூப் 4 ஆகிய போட்டிகள் தேர்வுகள் தமிழ்நாட்டு தேர்வாணையத்தால் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2a வில் உள்ள மொத்தம் 2327 காலி பணியிடங்கள் உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்புகளை வெளியிட்டது.

இந்த குரூப் 2 மற்றும் 2 ஏ மூலம் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர், வனவர், உதவிப் பிரிவு அலுவலர் மற்றும் நிரலர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி ஜூலை 19ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதற்கான முதன்மை போட்டித் தேர்வுகள் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2a தேர்வு எழுதுபவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
OVERCOMING STRUGGLES.. சவால்களை நொறுக்கி.. சாதனைகளைப் படைப்போம்!
வேலூர் ஶ்ரீபுரம் பொற்கோவிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம்
விஜய் பிரசாரம்... ஈரோட்டில் தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை
தங்கம் விலை இன்றும் உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை உயர்வு!
மார்கழி 02ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 02 வரிகள்
Healthy Cooking: சுவையான மிளகு குழம்பு செய்வது எப்படி?
சிந்தனைத்துளிகள்.. ரகசியமான வாழ்கைப் பாதையில் மாற்றம் ஒன்றே மாறாதது!
ஆணுக்கு சமமாய் நானும் தான்!
The Power of Hope... நம்பிக்கையின் சக்தி.. பலம் தரும்.. சவால்களைச் சந்திக்க தைரியம் தரும்!
{{comments.comment}}