சென்னை: நாளை மகா சிவராத்திரி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்று முதல் மார்ச் 10ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரி. இதற்காக மக்கள் இன்று முதல் தங்களின் குலதெய்வத்தை வணங்குவதற்காக சொந்த ஊருக்கு பயணிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் மகா சிவராத்திரியுடன் சனி மற்றும் ஞாயிறு வார இறுதி வருவதால் மக்கள் பேருந்துகளில் பயணிக்க கூட்டம் அலைமோதும்.
இதனை தடுக்க தமிழக போக்குவரத்து துறை தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் இன்று முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கவுள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், ஆகிய பகுதிகளுக்கு இன்று 270 சிறப்பு பேருந்துகளும், நாளை 300 பேருந்துகளும், மார்ச் 9ஆம் தேதி 430 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூருக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் 70 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது தவிர பெங்களூர், திருப்பூர், ஈரோடு, மற்றும் கோவையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
மேலும் சிறப்பு பேருந்துகளில் பயணிகள் சரியாக பயணம் செய்கிறார்களா.. அவர்களுக்கு இடையூறு எதுவும் வருகிறதா.. அல்லது சிறப்பு பேருந்துகளை முறையாக இயக்கப்படுகிறதா.. என்பதை கண்காணிக்க பேருந்து நிலையங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!
கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்
மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!
அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!
பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!
அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!
வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி
தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்.. முதல்வர் மு க ஸ்டாலின்
{{comments.comment}}