ஆடிப்பூரம் விசுவாசு வருடம் 20 25 ஜூலை மாதம் 28ஆம் தேதி ஆடி பன்னிரண்டாம் நாள் திங்கட்கிழமை ஆடிப்பூரமும் ,சதுர்த்தி திதியும் அமைந்துள்ளது மிகவும் விசேஷமான நாள் ஆகும்.
இன்று விநாயகர் பெருமானையும், ஆண்டாளையும், அம்பாளையும் வழிபாடு செய்ய உகந்த நாள். குழந்தை பாக்கியம் தள்ளிப் போகும் தம்பதியரும், விரைவில் திருமணம் நடைபெற வேண்டுமா ?... இந்த அற்புத நாளை தவற விடாதீர்கள்..
ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திர தினத்தன்று உலகிற்கே தாயாக விளங்கும் அன்னை பராசக்தி அவதரித்த நாளாகவும் ,அன்னைக்கு வளைகாப்பு நடத்தும் நாளாகவும் ,ஆண்டாள் நாச்சியார் அவதரித்த தினமாக "ஆண்டாள் ஜெயந்தி"யாக இந்த ஆடிப்பூர நாள் அன்று கோவில்களில் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

ஜூலை மாதம் 27ஆம் தேதி ஞாயிறு மாலை 6 :55 மணிக்கு பூரம் நட்சத்திரம் துவங்கி ஜூலை 28ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 8 மணி வரை உள்ளது. ஆடிப்பூரம் நாள் அன்று அம்மன் கோவில்களில் அம்மனுக்கு கண்ணாடி வளையல் மாலைகளை அணிவித்து வளைகாப்பு திருவிழா நடைபெறும். இந்த நாளில் பெண்கள் அம்பாளுக்கு விரதம் இருந்து மஞ்சள் ,குங்குமம், வளையல் உள்ளிட்ட மங்கள பொருட்களை படைத்து வழிபடுவார்கள்.
ஏதோ ஒரு காரணங்களால் திருமணம் தடைபடுகிறது என்றாலும் ,பல சிகிச்சைகள் செய்து குழந்தை பாக்கியம் தாமதமாகும் தம்பதியரும் இந்த ஆடிப்பூரம் அன்று அம்மனை வழிபாடு செய்ய நல்ல பலன்கள் கிடைக்கும். அம்மனுக்கு கோவிலுக்கு செல்பவர்கள் கண்ணாடி வளையல்கள் வாங்கிச் சென்று, அம்மனுக்கு அணிவித்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.
அம்மனுக்கு மாலையாக அணிவிக்கும் கண்ணாடி வளையல்களை கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுப்பார்கள் அதனை அணிந்து கொள்வது மிகவும் சிறப்பானதாகும். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு ஆடிப்பூரம் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
மேலும் இன்று சதுர்த்தி திதியும் அமைந்துள்ளதால் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது அதீத சிறப்பு. வீடுகளில் பூஜை அறையில் ஒரு மனை பலகையில் பச்சரிசி மாவினால் கோலமிட்டு சிகப்பு நிற துணி விரித்து அம்மன் படம் அல்லது அம்மன் விக்ரகம் அதன் மேல் வைத்து மஞ்சள், குங்குமம் ,சந்தனம் வைத்து ,மலர்களால் அலங்கரித்து, வளையல்களை மாலையாகவும் அல்லது ஒரு தட்டில் வைத்தும் நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல் பாயாசம் இவற்றை வைத்து அம்மனுக்கு உரிய மந்திரங்களை சொல்லி தீப தூப ஆராதனை செய்து அம்மனை வழிபட அனைத்து வளங்களும் நலங்களும் அருள்வாள்.
திருமணத்தடை உள்ளவர்கள் விரைவில் வீட்டில் கெட்டி மேளம் கொட்ட வேண்டும் என்றும், திருமணமான தம்பதியர் குழந்தை சத்தம் கேட்க வேண்டும் என்றும் ,மனதார முழு நம்பிக்கையுடன் வேண்டிக் கொள்ளுங்கள் கட்டாயம் அம்பிகை அருள் புரிவாள். எந்த காரியத்தையும் நம்பிக்கையுடன் செய்தால் தானே நிஜமாகும் ...மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
திமுக ஆட்சியில் கல்வி நிலையங்கள் கூட போதைப் பொருள்களின் புகலிடமாக மாறியிருக்கிறது: அண்ணாமலை
பிப்., 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும்: புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு
வேரின் விசேஷம்!
படு சூடாகி வரும் உலகம்.. என்னெல்லாம் ஆபத்து காத்திருக்கு தெரியுமா?
விஜய் கட்சி ஆபத்துல இருக்கு... அதனால தான் விசில் அடிக்கிறாங்க: ஜெயக்குமார் பேட்டி
தந்தையின் உடல்நிலை சரியில்லை... பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்தும் விலகுகிறேன்: அண்ணாமலை
தங்கம் வெள்ளி விலை நிலவரம் என்ன தெரியுமா? இதோ முழுவிபரம்!
இயற்கையின் சமநிலை.. இறைவனின் கணக்கு.. இதைப் புரிந்து கொள் மனிதனே!
தென்றல் தவழும்.. தமிழ் நாயகன் முருகனின்.. திருமலை திருக்கோவில்!
{{comments.comment}}