- ஸ்வர்ணலட்சுமி
பௌம பிரதோஷம்.. இன்றைய பிரதோஷம் பெளம பிரதோஷமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை ஆன இன்று அமைந்துள்ள பிரதோஷம் "பௌம பிரதோஷம் " என்று அழைக்கப்படுகிறது.
பிரதோஷம் சிவபெருமானையும் அவரது வாகனமான நந்தியையும் வழிபடும் மிகவும் மங்களகரமான நாள் இன்று .விசுவா வசு வருடம் 20 25 ஜூலை 22ஆம் தேதி ஆடி மாதம் ஆறாம் நாள் செவ்வாய்க்கிழமையான இன்று மாலை பிரதோஷ வழிபாடு அனைத்து சிவன் கோயில்களிலும் அனுஷ்டிக்கப்படுகிறது.
பிரதோஷ நாளில் தியானிக்க வேண்டிய சக்தி வாய்ந்த சிவ மந்திரங்கள்: "மகா மிருத்தியுஞ்சய மந்திரம்": ஓம் த்ரயம்பகம் யஜாமகே சுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர் வாருகமிவ பந்தனான் ம் ருத்யோர் முக்ஷிய மாம்ரூதாத்"
நீலகண்ட மகாதேவ மந்திரம் :"ஓம் நமோ நீலகண்டாய"
பிரதோஷ நாளில் சிவ பெருமானுக்குரிய சக்தி வாய்ந்த மந்திரங்களை உச்சரிப்பதும், தியானிப்பதும் பிரபஞ்சத்துடன் ஆன தெய்வீக ஆற்றலுடன் சக்தி வாய்ந்த இணைப்பை நமக்கு ஏற்படுத்த உதவும். இந்த புனிதமான மந்திரங்களை உச்சரிப்பதனால் மனதெளிவு ஏற்படும். நோய்கள் நீங்கும். இதன் அதிர்வுகளால் ஆத்மாவில் நேர்மறை ஆற்றல்கள் பரவும் .சிவபெருமானின் அருள் கிடைக்கும். வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
மேலும் அதிர்ஷ்டம் ,செல்வ செழிப்பு, வெற்றி முதலியனவற்றை கொண்டு வரும் . எதிர்மறை ஆற்றல்களை தடுத்து ,பாதுகாப்பு உணர்வையும் நேர்மறை ஆற்றல்களையும் பெருக்கும்.
நேரம்: கிருஷ்ணபக்ஷத்யோதசி திதி நேரம் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 6 :41 முதல் 23ஆம் தேதி 4:43 வரை உள்ளது.
பிரதோஷ நாளான இன்று ஆழ்ந்த குழி போன்ற துன்ப வினைகளில் அகப்பட்டு தவிக்கும் ஆழமான பிறவி பந்தம் கட்டுண்ட நாம் அதிலிருந்து கரையேறி மீண்டு வருவதற்காக வழி ஒன்றை காட்டி அருள ஆதி அந்தமில்லா நாயகன் பிரதோஷ நாயகன் சிவபெருமானை போற்றி வணங்கும் நாள்.
சிவன் கோவில்களில் மாலை அந்தி நேரத்தில் பிரதோஷ காலம் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னும் பின்னும் தோராயமாக 1:30 நேரம் அதாவது மாலை 4:30மணி முதல் 6:30 மணி வரை பிரதோஷ பூஜை நடைபெறுகிறது.
பிரதோஷத்தின் போது ஸ்ரீ ருத்ர அபிஷேகம் பூஜைகள், சிவபெருமான் மற்றும் ஸ்ரீ நந்தி தேவருக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனைகள் செய்யப்படுகிறது.
இன்று செவ்வாய்க்கிழமை வரும் பிரதோஷம் பௌம பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபட பாவங்கள் நீங்கி ,கிரக தோஷங்கள் நீங்கி ,பண சிக்கல்கள் உடல் நலப் பிரச்சினைகள் நீங்கி அனைத்து வளங்களும், நலங்களும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
இவ்வாறு வழிபாடுகள் செய்வதினால் சிவனின் அருள் எப்பொழுதும் நம்முடன் இருப்பதை உணர முடியும். சிவபெருமானுடன் நெருக்கமாக இருக்கும் உணர்வையும் ,ஆன்மீக ஞானத்தையும், வளர்ச்சியையும் உணர்வுகளை கட்டுப்படுத்தும் திறனையும் ,ஒழுக்கமான நெறிமுறை வாழ்க்கையையும், பின்பற்றி வாழலாம். மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஜெகதீப் தன்கர் விரைவில் குணமடைய வேண்டும்.. பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கரின் ராஜினாமா ஏற்பு
தக்காளி விலை மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரு கிலோ ரூ.60.. அப்படீன்னா சட்னிக்கு ஆப்பா!
அதிமுக கூட்டணிக்கு வாங்க.. சீமான், விஜய்யை மீண்டும் அழைத்த எடப்பாடி பழனிச்சாமி.. போவாங்களா!
ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா ஏன்.. என்னவோ நடந்திருக்கிறது.. சந்தேகம் கிளப்பும் காங்கிரஸ்
டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தீ.. பத்திரமாக தரையிறங்கியது.. பயணிகளுக்கு ஆபத்தில்லை
ரவி சாஸ்திரியின்.. சிறந்த இந்திய வீரர்கள் லிஸ்ட்டில்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!
வெண்ணெய் .. அது ஏன் மஞ்சள் நிறத்தில் இருக்குன்னு தெரியுமா?.. தெரிஞ்சுக்கங்க பாஸு!
{{comments.comment}}