- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: குரு பிரதோஷ விரதம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. மாத சிவராத்திரியும் பிரதோஷமும் ஒரே நாளில் ஒன்று இணைந்து வருவதால் இந்நாள் குரு பிரதோஷ விரதம் என்று அழைக்கப்படுகிறது.
குரு பிரதோஷ விரதம்:

ஓம் காசி லிங்கமே போற்றி!
ஓம் குரு லிங்கமே போற்றி!
ஓம் கேதார லிங்கமே போற்றி !
ஓம் கைலாச லிங்கமே போற்றி!
ஓம் கோடிலிங்கமே போற்றி !
ஓம் சக்தி லிங்கமே போற்றி!
ஓம் சாந்தலிங்கமே போற்றி!
ஓம் தியானலிங்கமே போற்றி!
ஓம் சுயம்புலிங்கமே போற்றி !
ஓம் ஸ்வர்ணலிங்கமே போற்றி !
ஓம் சுந்தரலிங்கமே போற்றி!
மார்ச்- 27, 2025 வியாழக்கிழமை, பங்குனி 13. ஆம் நாள் மாத சிவராத்திரியும், பிரதோஷ விரதமும் ஒரே நாளில் அனுசரிக்கப்படுகிறது. இன்று தேய்பிறையில் வரும் இந்த மாத சிவராத்திரி பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந்நாளில், சிவபெருமான் சிவலிங்கத்தில் வசிப்பதாக ஐதீகம். சிவ பக்தர்கள் பிரதோஷ விரதத்தையும், மாசிச் சிவராத்திரியையும் மிகவும் புனிதமாக கருதுகின்றனர் .இந்த வழிபாடு செய்வதினால் பொருள் நன்மைகளை தரும் என்றும் ,அனைத்து எதிர்மறைகளையும் நீக்குவதற்காக பிரதோஷ விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
பங்குனி மாதம் தேய்பிறை சதுர்த்தசி மாத சிவராத்திரி மிகுந்த விசேஷம். இது மகா சிவராத்திரிக்கு அடுத்த முக்கியமான சிவராத்திரி ஆகும். இன்றைய நாளில் சிவலிங்கா அபிஷேகம், பஞ்சாட்சர மந்திரம் (ஓம் நமசிவாய )ஜெபம் நோன்பு இருப்பது அதீத நன்மை நல்கும்.
பிரதோஷம் என்பது மாலை நேரத்தில்4:30 மணி முதல் 6:30 மணிக்குள் சிவபெருமான் மற்றும் நந்தியையும் வழிபடுவதற்கான சிறப்பு நேரமாகும். பிரதோஷ விரதம் கடைபிடிக்கும் போது சிவபெருமான் சந்திரமவுலீஸ்வர கோலத்தில் காட்சியளிக்கிறார்.
இந்த நாளில் வில்வ அர்ச்சனை செய்து வில்வாஷ்டகம் படிக்க நீண்ட ஆயுள் கிடைக்கும். *குடும்ப அமைதி நிம்மதி கிட்டும்.*பாவங்கள் நீங்கி நன்மை பெருகும். படிக்கும் குழந்தைகள் பொதுத்தேர்வு எழுதும் குழந்தைகள் வீட்டில் இருப்பவர்கள் விரதம் இருந்து நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய அவர்களுக்கு புத்தி கூர்மை மேலும் தேர்வில் நன் மதிப்பெண் பெற உறுதுணையாக இருக்கும்.
* திருமண தடை நீங்கி வாழ்க்கையில் திருமண யோகம் கைகூடும்.
* புத்திர பாக்கியம் கிடைக்கவும் இந்த வழிபாடு உற்றத் துணையாக இருக்கிறது.
இத்தனை மகிமை வாய்ந்த குரு பிரதோஷ விரதம் இருந்து வாழ்வில் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று வாழ்வோமாக! வாழ்க வளமுடன். மேலும் இது போன்ற ஆன்மீக தகவலுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}