உலக தாய்மொழி தினம் 2025.. தாயின் சிறந்த கோயிலும் இல்லை.. தாய்மொழிக்கிணை தரணியில் இல்லை!

Feb 21, 2025,05:39 PM IST

- கோவை சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்


கருவை விதைத்தவன் தந்தை - எனினும்

கருவில் சுமப்பவள் தாய் - நம்மை

கருத்தாய் வளர்ப்பவள் தாய் - சிறந்த

கருணைத் தெய்வம் தாய் - பேசக்

கற்றுத் தருபவள் தாய் .


தாலாட்டில் துவங்கி இம்மொழி

தாயின் வழி வந்ததால் -அதனைத்

தாய்மொழி என்றழைத்தோம் -அதற்கு

தனிச்சிறப்பளித்தோம்.




தாய்மண் என்பதுவம் ,

தாய்நாடென்பதுவும் ,

தாய் மொழி என்பதுவும் - அந்தத்

தாய்க்குரிய பெருமையன்றோ.


மற்ற மொழிகள் பலவும்

மனம் விரும்பிக் கற்றாலும்

தாய்மொழிப் பண்டிதமே

தரணியில் உயர்வு தரும்.


ஏனைய மொழிகள் எல்லாம்

சுவை சேர்க்கும் பதார்த்தம் போல்,

தாய்மொழிதான் நமக்கு

பசி தீர்க்கும் சோறாகும் - நம்மைத்

தாங்கிடும் வேராகும் - அறிவுக்கு

அஸ்திவாரம் போலாகும்.


தாயின் சிறந்த கோயிலும் இல்லை

தாய்மொழிக்கிணை தரணியில் இல்லை.


தாய்மொழியை நேசிப்போம்.

தாய்மொழியை வாசிப்போம்.

தாய்மொழியை சுவாசிப்போம்.

தாய்மொழியை வணங்கிடுவோம்.


அவரவர் மொழி வளர்ப்போம்

அடுத்தவர் மொழி மதிப்போம்.

அனைத்து மொழிகளையும்

அரவணைத்துச் செல்வோம்.

அவரவர் ஊரில் பிழைக்க

அவரவர் மொழியே போதும்.

அனைத்துலகிலும் பழக

அன்னிய மொழிகளும் வேண்டும்.


மற்ற மொழிகள் மீது - அதீத

மயக்கம் கொள்ளாமல்,

தாய்மொழி பேசுதற்கு - சிறிதும்

தயக்கம் கொள்ளாமல்

தாய் மொழி சிறப்புணர்ந்து -அதனைத்

தரணியில் பரப்பிடுவோம் - அதையோர்

தவமாய்க் கொண்டிடுவோம்.


வாழ்க தாய்மொழி.

வளர்க தாய்மொழிப் பற்று

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்