உலக தாய்மொழி தினம் 2025.. தாயின் சிறந்த கோயிலும் இல்லை.. தாய்மொழிக்கிணை தரணியில் இல்லை!

Feb 21, 2025,05:39 PM IST

- கோவை சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்


கருவை விதைத்தவன் தந்தை - எனினும்

கருவில் சுமப்பவள் தாய் - நம்மை

கருத்தாய் வளர்ப்பவள் தாய் - சிறந்த

கருணைத் தெய்வம் தாய் - பேசக்

கற்றுத் தருபவள் தாய் .


தாலாட்டில் துவங்கி இம்மொழி

தாயின் வழி வந்ததால் -அதனைத்

தாய்மொழி என்றழைத்தோம் -அதற்கு

தனிச்சிறப்பளித்தோம்.




தாய்மண் என்பதுவம் ,

தாய்நாடென்பதுவும் ,

தாய் மொழி என்பதுவும் - அந்தத்

தாய்க்குரிய பெருமையன்றோ.


மற்ற மொழிகள் பலவும்

மனம் விரும்பிக் கற்றாலும்

தாய்மொழிப் பண்டிதமே

தரணியில் உயர்வு தரும்.


ஏனைய மொழிகள் எல்லாம்

சுவை சேர்க்கும் பதார்த்தம் போல்,

தாய்மொழிதான் நமக்கு

பசி தீர்க்கும் சோறாகும் - நம்மைத்

தாங்கிடும் வேராகும் - அறிவுக்கு

அஸ்திவாரம் போலாகும்.


தாயின் சிறந்த கோயிலும் இல்லை

தாய்மொழிக்கிணை தரணியில் இல்லை.


தாய்மொழியை நேசிப்போம்.

தாய்மொழியை வாசிப்போம்.

தாய்மொழியை சுவாசிப்போம்.

தாய்மொழியை வணங்கிடுவோம்.


அவரவர் மொழி வளர்ப்போம்

அடுத்தவர் மொழி மதிப்போம்.

அனைத்து மொழிகளையும்

அரவணைத்துச் செல்வோம்.

அவரவர் ஊரில் பிழைக்க

அவரவர் மொழியே போதும்.

அனைத்துலகிலும் பழக

அன்னிய மொழிகளும் வேண்டும்.


மற்ற மொழிகள் மீது - அதீத

மயக்கம் கொள்ளாமல்,

தாய்மொழி பேசுதற்கு - சிறிதும்

தயக்கம் கொள்ளாமல்

தாய் மொழி சிறப்புணர்ந்து -அதனைத்

தரணியில் பரப்பிடுவோம் - அதையோர்

தவமாய்க் கொண்டிடுவோம்.


வாழ்க தாய்மொழி.

வளர்க தாய்மொழிப் பற்று

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Short Story: புதுமைப்பெண்!

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

ஆதலால் காதல் செய்வீர்!

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

அதிகம் பார்க்கும் செய்திகள்