பணப்பிரச்சினை தீர்ந்து செல்வச் செழிப்பு கூடணுமா.. மகாலட்சுமி வழிபாடு பண்ணுங்க.. எல்லாம் சரியாகும்

Feb 14, 2025,10:32 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


பிப்ரவரி 14    2025. மாசி மாதம் இரண்டாம் நாள் வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு செய்ய பண பிரச்சினை தீர்ந்து வளமுடன் செல்வ செழிப்புடன் வாழலாம்.


ஆடி வெள்ளி ,தை வெள்ளிக்கிழமை போலவே மாசி மாதம் வரும் வெள்ளிக்கிழமை சிறப்பான நாளாகும்.


மாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை நாளைய தினம் பூரம் நட்சத்திரம் சேர்ந்து வருவதால் அதீத சிறப்பு வாய்ந்த நாளாகும். ஆண்டாள் அவதரத்த நட்சத்திரம் பூரம் நட்சத்திரம் .நாம் வீட்டில் பூஜை அறையில் ஐஸ்வர்ய லட்சுமி கோலம் போட்டு பச்சரிசி மாவினால் போடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் .பூஜை அறையில் உள்ள இறைவன் படங்களுக்கு புதிதாக மலர்கள் வைக்கவும் ,அதுவும் வாசனை மிகுந்த மலர்கள் வைப்பது மிகவும் சிறப்பு. மகாலட்சுமி தாயாருக்கு தாமரை மலர் மிகவும் பிடித்தமான மலராகும். பஞ்ச பாத்திரத்தில் நீர் ஊற்றி துளசி போட்டு வழிபடவும்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மகாலட்சுமி தாயாரை மனதார வழிபடுவது மிகச் சிறப்பு. மகாலட்சுமி அஷ்டகம் படிப்பது மிகவும் நல்லது.




நாம் வீட்டில் நைவேத்தியமாக கற்கண்டு பொங்கல், பழங்கள் ,பால்  நாட்டுச் சர்க்கரை வைத்து வழிபடலாம் .அவரவர் சூழலுக்கு ஏற்ப வீட்டில் செய்யலாம் அல்லது கடைகளில் இனிப்பு பொருள் வைக்க வேண்டும் என்பதால் லட்டு வாங்கி வைத்து வழிபடலாம் .


ஒவ்வொருவருக்கும் பல விதங்களில் பண பிரச்சினை இருக்கும். அவரவர் வேண்டுதல்களை இறைவனிடம் மனதார கூறி இப்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வழிபாடு செய்ய தங்கள் பிரச்சனைகள் சரியாகிவிடும் என்பது ஐதீகம் .


முழு நம்பிக்கையோடு தங்கள் கடன் பிரச்சினைகள் தீரும் என்று மனதில் கூறி மகாலட்சுமி தாயாரை வழிபட படிப்படியாக பணப் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். 


நாம் வழிபாட்டில் வைத்த பிரசாதத்தை வீட்டில் உள்ளவர்கள் அனைவருக்கும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கும், குழந்தைகளுக்கும் கொடுக்கவும் .பிறகு அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபாடு செய்யலாம் .அனைவரும் அனைத்து வளங்களும் செல்வ செழிப்பும் பெற்று வாழ்வோமாக.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு...மாவட்ட வாரியாக நீக்கப்பட்டவர்கள் விபரம்

news

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக ஒழிக்கவே பெயர் மாற்றம் - திருமாவளவன்

news

செவிலியர்களுக்கு காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

news

திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி

news

அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா? இல்லையா?... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!

news

பிட்புல், ராட்வைலர் நாய்களை வளர்க்கக் கூடாது... மீறினால் 1 லட்சம் அபராதம்: மேயர் பிரியா!

news

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை...நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

news

விஜய் தான் களத்தில் இல்லை.. திடீரென வருகிறார்.. திடீரென காணாமல் போகிறார்: தமிழிசை செளந்தரராஜன்

news

ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள்... ஜன.,5ம் தேதிக்குள் வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்