ஜனவரி 19.. தேசிய பேரிடர் மீட்புப் படையின் எழுச்சி நாள் (Raising day)

Jan 19, 2026,04:42 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed


NDRF-ன் எழுச்சி நாள் (Raising Day) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 19 அன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் NDRF வீரர்களுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


NDRF அதாவது தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களின் சேவையைப் பாராட்டி, அவர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்து வாழ்த்துக்களைத் தெரிவிக்க இந்த தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


உலக அளவில் NDRF-ன் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்றும், பேரிடர் காலங்களில் அவர்கள் நம்பிக்கையின் தூணாக விளங்குகிறார்கள். பேரிடர் காலங்களில் உயிர்களைக் காப்பதிலும், மீட்புப் பணிகளிலும் NDRF-ன் பங்கு வகிக்கிறது.

இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) தனது எழுச்சி நாளை ஜனவரி 19-ம் தேதி  கொண்டாடுகிறது.




நாட்டில் புயல், வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாப்பதற்காக, தேசிய பேரிடர் மீட்பு படை (என்.டி.ஆர்.எப்.) கடந்த 2006-ம் ஆண்டு ஜனவரி 19-ந்தேதி துவங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும், தேசிய பேரிடர் மீட்பு படை எழுச்சி தினம் கொண்டாடப்படுகிறது.


பேரிடர் காலங்களில் எப்போதும் முன்கள பணியாளர்களாக செயல்படுபவர்கள் என அவர்களை பாராட்டுகிறார்கள்.


அவர்கள், தனித்திறனுடன் செயல்பட்டு, சிக்கலில் இருந்து மக்களை விடுவிக்கும் பணியை திறம்பட செய்கிறார்கள். அவர்கள் மக்களை பாதுகாப்பதற்காக முயற்சிகள் எடுத்து, நிவாரணம் அளித்து, மக்களின் நம்பிக்கையையும் மீட்டெடுக்கின்றார்கள்.


இந்த தேசிய பேரிடர் மீட்பு படை எழுச்சி தினத்தில், நெருக்கடியான தருணங்களில் தீர்க்கத்துடன் முடிவெடுக்கும் ஆண் மற்றும் பெண் ஆகியோருக்கு ஆழ்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வோம்.


நாட்டுக்கு உயர்தர சேவையை அவர்கள் வழங்குகிறார்கள். பேரிடருக்கு தயாராவது மற்றும் பொறுப்புடன் செயல்படுவது என உலகளவில் என்.டி.ஆர்.எப். வீரர்களுக்கு நாம் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மிரட்டிய இங்கிலாந்து.. இளம் புயல் ஜேக்கப் பெத்தேலின் சதம்.. வீணானது.. பைனலில் இந்தியா!

news

இந்தியாவின் தெறி ஆட்டம்.. இறுதிப் போட்டிக்குப் போக .. இங்கிலாந்துக்குத் தேவை 254 ரன்கள்!

news

Sanju Samson: மும்பை அரையிறுதியில் சஞ்சு சாம்சன் ருத்ரதாண்டவம்.. அந்த அரபிக் கடலே அதிர்ந்து போச்சு!

news

இவர்கள் பிரிந்து விட மாட்டார்களா என ஏங்கிய எதிரிகளின் கனவு தூளானது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

திமுக ஆட்சியில் மக்களின் நிம்மதியே முடிந்து விட்டது: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

news

நிதீஷ் குமார் நிலை இபிஎஸ்-க்கு வந்து விடக் கூடாது... மாணிக்கம் தாகூர் அக்கறை

news

Nitish Kumar: பாஜக.,வேலையே இது தான்...நான் அப்பவே சொன்னேன்...தேஜஸ்வி ஆதங்கம்

news

சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் திருமணம் கோலாகலம்: பிரபலங்கள் பங்கேற்பு!

news

தமிழகத்திலும் பீகார் பார்முலா... பாஜக மீது விசிக வன்னி அரசு விமர்சனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்