- இரா. மும்தாஜ் பேகம்
இந்திய மொழிகளில் செம்மொழி (Classical Language) தகுதியைப் பெற்ற முதல் மொழி தமிழ் ஆகும். 2004-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதி மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசால் இத்தகுதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் முதல்வராக இருந்தவர் கலைஞர் கருணாநிதி.
தொன்மை, தனித்தன்மை, செழுமையான இலக்கண மற்றும் இலக்கிய வளம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழ் செம்மொழியாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் இரா. மும்தாஜ் பேகம் எழுதிய கவிதை:
செம்மொழியாகிய தமிழ் மொழியே...

தமிழ் மொழியே! தமிழ் மொழியே!
அமிழ்தினும் இனியநல் தமிழ் மொழியே
தொன்மை வாய்ந்த தமிழ் மொழியே
தொல்காப்பியம் தந்த தமிழ் மொழியே
வள்ளுவன் முதல் வாலி வரை
வாழ்த்திப் பாடிய தமிழ் மொழியே
சிறப்புகள் நிறைந்த தமிழ் மொழியே
செம்மொழியாகிய தமிழ் மொழியே
அசைச்சீர் அடிகளில் பெற்றிருப்பாய்
அணியெனும் அணிகலன் பூண்டிருப்பாய்
முரண் தொடை மூச்சாய்பெற்றிருப்பாய்
முத்தமிழ் சுவையுடை தமிழ் மொழியே
பத்துப்பாட்டும் படைத்து நின்றாய்
பதினெண்கீழ்க்கணக்காய் பரவினின்றாய்
எட்டுத்தொகையும் கொண்டிருந்தாய்
எட்டு திசைக்கும் குறள் தந்தாய்
ஐவகை இலக்கணம் கொண்டிருப்பாய்
ஐம்பெரும் காப்பியம் படைத்து நின்றாய்
அத்துனை சிறப்புடை தமிழ் மொழியே
உன்னை அள்ளிப் பருகனும் தமிழ் மொழியே
(இரா.மும்தாஜ் பேகம், ஓய்வு பெற்ற ஆசிரியர், கிரியேட்டிவ் ரைட்டர்ஸ், திருச்சி)
Tamil Poem: பூவே பொன்பூவே
அதிமுக மயமாகும் தவெக.. கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்.. இன்று இணைகின்றனர்!
Tamil Short Story: அழகு கோலம்!
Tamil Poem: மன(தின்)வலி
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
We The Leaders: புதிய அரசியல் இயக்கம்.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி.. அண்ணாமலை அறிவிப்பு!
தமிழகத்தில் தீவிரம் அடையும் தென்மேற்கு பருவமழை: 4 மாவட்டங்களுக்கு நாளை ‘ஆரஞ்சு அலர்ட்’
Annamalai Politics: அண்ணாமலையின் அரசியல் எப்படி இருக்கும்?
பாஜகவிலிருந்து விலகினார்.. அண்ணாமலையின் புதிய சகாப்தம் இன்று தொடங்குகிறது!
{{comments.comment}}