- ஸ்வர்ணலட்சுமி
விசுவாவசு வருடம் ஜூன் 23 திங்கட்கிழமை- சோமவாரம் அன்று ஆனி மாதம் ஒன்பதாம் தேதி தேய்பிறை பிரதோஷ நாளாகும். சிவமூர்த்தி ஸ்தோத்திரம்: ஓம் சிவ சிவசிவனே சிவபெருமானே போற்றி! போற்றி !விரைவினில் வந்தருள் விமலா போற்றி! போற்றி !போற்றி! மனதினில் நிறைந்திடும் பசுபதியே போற்றி! போற்றி!
இன்று இருக்கும் பிரதோஷம் ஆஷாட மாத கிருஷ்ண பக்ஷத்தில் வரும் சோமவார பிரதோஷ நாளாகும் ."பிரதோஷம்" என்பது சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாள் ஆகும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்களில் வரும் திரியோதசி திதி அன்று பிரதோஷம் அனுசரிக்கப்படுகிறது. இந்த திங்கட்கிழமை சிவபெருமானுக்குரிய நாளாக இருப்பதால் இன்று வந்துள்ள பிரதோஷம் மிகவும் விசேஷமானது ஆகும். இந்த நாளில் பக்தர்கள் சிவபெருமானை வழிபட்டு விரதமிருந்து அருகிலுள்ள சிவாலயங்களுக்கு சென்று வழிபடுவது சிறப்பு.
சிறப்புக்கள் : சோமவார பிரதோஷமான நாள் அன்று சிவபெருமானை வழிபடுவதால் ஆன்மீக பலம் ,அமைதி செல்வ வளம் ,கடன் பிரச்சினைகள், தம்பதியர் ஒற்றுமை, குடும்ப ஒற்றுமை பெருகும் என்று நம்பப்படுகிறது.
பிரதோஷ காலம் இன்று மாலை 4:30 மணிக்கு மேல் 6:00 மணிக்குள் வருகிறது.
பிரதோஷ காலத்தின் போது வலம் வரும் முறை உள்ளது .அதன்படி வலம் வரும்பொழுது அதீத நன்மை கிட்டும் பிரதோஷ தினத்தன்று வலம் வரும் முறையை "சோமசூத்ர பிரதட்சணம்" அல்லது "சோம சூக்த பிரதட்சணம்" என்று அழைக்கப்படுகிறது.
எப்படி? வலம் வர வேண்டும் என்பதை எளிமையாக நான் வரைந்துள்ள படத்தில் காணலாம். சோம சூத்திரப் பிரதட்சணம் முதலில் நந்தியை வணங்கி பிறகு அதன் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும் .அதன் பிறகு வழக்கமாக வலம் வருவதற்கு மாறாக அப்ப்ரதக்ஷணமாக அதாவது எதிர் வலமாக சண்டிகேஸ்வரர் சன்னிதி வரை போய் திரும்ப வேண்டும் .அபிஷேக தீர்த்தம் வரும் வழியை தாண்டாமல் வரவேண்டும். பிறகு போன வழியே திரும்ப வேண்டும் . நந்தியைதரிசனம் செய்து வழக்கமாக வலம் வரும் வழி வர வேண்டும். அபிஷேக தீர்த்தம் வரும் வழியை தாண்டாமல் அப்படியே திரும்பி நந்தி வரை வ லம் வர வேண்டும். இவ்வாறு மூன்று முறை செய்வதே :சோமசூத்திர பிரதட்சணம் "என்று அழைக்கப்படுகிறது.
இதற்கு ஒரு புராணக்கதை இருக்கிறது அக்கதை யாதெனில் ,ஆலங்கால விஷம் வெளிப்பட்டபோது பயத்துடன் அனைவரும் கயிலை நோக்கி ஓடினர். அப்போது விஷம் அப் பிரதக்ஷணமாக அவர்களுக்கு எதிராக வந்து விரட்டியது. எனவே அவர்கள் திரும்பி ஓட அங்கும் அவர்களை விஷம் வந்து துன்புறுத்தியது. இவ்வாறு இட -வலமாக அவர்கள் வலம் வந்த முறையை "சோம சூத்திர பிரதட்சணம்" என்று கூறப்படுகிறது.
வீடுகளில் பூஜை அறையில் சிவபெருமானுக்கு உகந்த மலர்கள் ,வில்வ இலைகள் சாற்றி ,நைவேத்தியம் வைத்து நெய் விளக்கு ஏற்றி "ஓம் நமச்சிவாய" எனும் மந்திரத்தை கூறி மனதார வழிபட சிவபெருமான் நம் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்.
தோஷங்களை நீக்குதல்- இந்த பிரதோஷ வழிபாடு, அதுவும் சோமவார பிரதோஷ வழிபாடு செய்து அனைவரது வாழ்விலும் அனைத்து வளங்களும் , நலங்களும் உண்டாகட்டும். மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
55 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்.. மதுரை உள்பட 9 மாவட்ட கலெக்டர்களும் இடமாற்றம்!
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம்... நடிகர் ஸ்ரீகாந்த் கைது!
4 மாநில சட்டசபை இடைத்தேர்தல் முடிவு : பாஜகவுக்குப் பின்னடைவு.. துளிர்த்த ஆம் ஆத்மி, காங்கிரஸ்!
சூர்யா 45 படத்தின் கதை என்னவா இருக்கும்.. கருப்பு டைட்டிலை இப்போதே கொண்டாடும் ரசிகர்கள்!
ரூ. 100 கோடியைத் தாண்ட தடுமாறும் தக்லைப்.. கர்நாடக குழப்பத்தால் ஏற்பட்ட ரூ. 30 கோடி நஷ்டம்!
என்னாது... 2026ல் மேற்குவங்க முதல்வர் ஆகப் போகிறாரா செளரவ் கங்குலியா?
வால்பாறையில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை: தேர்தல் ஆணையம்
தொண்டர் உயிரிழந்த சம்பவம்... ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது வழக்குப்பதிவு!
பாஜகவிற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டது அதிமுக: அமைச்சர் சேகர்பாபு
{{comments.comment}}