ஆடி மாதத்தின் முக்கிய வழிபாடு.. வளமான வாழ்வு தரும் வரலட்சுமி விரதம் 2024

Aug 16, 2024,09:01 AM IST

சென்னை: ஆடி மாதத்தில் வரும் மிக முக்கியமான விரத மற்றும் வழிபாட்டு நாட்களில் ஒன்று வரலட்சுமி விரதம். ஆடி மாத வளர்பிறையில் வரும் கடைசி வெள்ளிக்கிழமையை வரலட்சுமி விரதம் என கொண்டாடுகிறோம்.


ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வரும் ஆண்டுகளில் மட்டும் வரலட்சுமி விரதம் ஆவணி மாதத்தில் வருவது உண்டு. இந்த நாளில் திருமணமான பெண்கள் தங்களின் கணவரின் நல்வாழ்விற்காகவும், குடும்ப சுபிட்சத்திற்காகவும், திருமணமாகாத பெண்கள் நல்ல கணவர் அமைய வேண்டும் என்பதற்காகவும் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம்.


யாரெல்லாம் வரலட்சுமி விரதம் இருக்கலாம்?




உண்மையில் வரலட்சுமி விரதத்தை ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என யார் வேண்டுமானாலும் இருக்கலாம். வரலட்சுமி விரதம் எதற்காக இருக்கப்படுகிறது, இந்த வழக்கம் எப்படி வந்தது என்பதற்கு புராணங்களில் பல கதைகள் சொல்லப்படுகிறது. அவற்றில் பிரபலமாக சொல்லப்படுவது, சாருமதி என்ற ஏழைப்பெண், மிகுந்த பக்தி உடையவள். தன்னுடைய கணவர், குடும்பத்தின் நலனுக்காக மட்டுமே வாழும் சிறந்த குணவதி. அப்படிப்பட்ட சாருமதியின் கனவில் காட்சி கொடுத்த மகாலட்சுமி, வரலட்சுமி விரதம் இருக்கும் முறைகளை சொல்லிக் கொடுத்து, இந்த விரதத்தை தொடர்ந்து இருக்கும் படி சொல்லி உள்ளார். அவளும் அதன் படியே இருக்க, வருடத்திற்கு வருடம் அவர்களின் குடும்பத்தின் செல்வ நிலை என்பது உயர்ந்து, நிறைவான, வளமான வாழ்க்கையை வாழ்ந்தாள் என்கின்றன புராணங்கள்.


நம்பி வழிபட்டால் நலம் தருவாள் மகாலட்சுமி


வாழ்வில் பலவிதமான துன்பங்களை அனுபவித்து, வாழ்க்கையில் இருள் சூழ்ந்து, பாதை தெரியாமல் திண்டாடிக் கொண்டிருப்பவர்களுக்கு வரங்கள் பல தந்து, வளமான வாழ்க்கையை தருபவள் தான் வரலட்சுமி. தன்னை நம்பி வழிபடுபவர்கள் கேட்கும் வரங்களை தருக் கூடிய வரலட்சுமி, மகாலட்சுமியின் அம்சமானவள். ஒருவருக்கு தான் அளித்த செல்வத்தை அவர் எவ்வாறு பயன்படுத்துகிறார்? யாருக்காவது தானம் செய்கிறாரா? எந்த அளவிற்கு இரக்க குணத்துடன் வாழ்கிறார் என்பதை மகாலட்சுமி ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பார்க்கும் நாளை வரலட்சுமி விரதம் ஆகும். 


வரலட்சுமி விரதம் அன்று மகாலட்சுமியை வாசலில் இருந்து, அவளுக்குரிய மந்திரங்கள், துதிகளை சொல்லி வீட்டிற்குள் அழைத்து வந்து, வாசனை மலர்களால் அலங்கரிக்க வேண்டும். நம்மால் முடிந்த எளிமையான உணவுகள் அல்லது பழங்களை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். சர்க்கரை பொங்கல் அல்லது கற்கண்டு சாதம் படைப்பது சிறப்பானதாகும்.


லலிதா சகஸ்கரநாமம் - அபிராமி அந்தாதி படிக்கலாம்




இந்த நாளில் மகாலட்சுமி அல்லது வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு அம்பாளின் வடிவத்திற்கு பூக்கள், அக்ஷதை, குங்குமம், 108 நாணயங்கள் ஆகிய ஏதாவது ஒன்றை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். அம்மனுக்குரிய லலிதா சகஸ்ரநாமம், கனகதாரா ஸ்தோத்திரம், அபிராமி அந்தாதி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பாடி வழிபட வேண்டும்.


சுமங்கலி பெண்கள் வரலட்சுமி விரதம் அன்று தாலிக்கயிறு மாற்றிக் கொண்டால் கணவர் ஆயுள் பலப்படும். இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 16ம் தேதி வருகிறது. அன்றைய தினம் காலை 6 முதல் 07.20 மணி அல்லது காலை 9 முதல் 10.20 வரையிலான நேரத்திற்குள் மகாலட்சுமிக்கு பூஜை செய்து, தாலிக்கயிறு மாற்றிக் கொள்ளலாம். அதுவும் முடியாதவர்கள் மாலை 6 மணிக்கு மேல் வரலட்சுமி பூஜையை செய்யலாம். ஆனால் தாலிக்கயிறு மாற்றுபவர்கள் காலை நேரத்தில் மட்டுமே மாற்றிக் கொள்ள வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்