இன்று உலக கவிதைகள் தினம்.. கவிதைகளை ரசிக்காத மனங்கள் எங்குமே இல்லை.. மனதுக்கும், நமது திறமைக்கும் பெரும் ஊக்கம் தருவது கவிதைகள்.
மனிதன் தனது உணர்வுகளை வெளிப்படுத்த பயன்படுத்தி ஒரு ஊடகம்தான்.. கவிதை. மனதில் எழும் எண்ணங்களையும், உணர்வுகளையும் வார்த்தைகளில் அலங்காரம் சேர்த்து வெளிப்படுத்தும்போது தோன்றுவதுதான் கவிதை.
அழகிய உணர்வுகளின் வெளிப்பாடுதான் கவிதை. மகிழ்ச்சி.. கவலை .. கோபம் .. காதல் .. பாசம் என மனிதர்களுக்குரிய அனைத்து உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்து பயன்படுவது கவிதை ஆகும். ஒருவரது கவித்திறமை பல ரூபங்களில், பல விதங்களில் பரந்து விரிகிறது.. கவிதையாக, திரைப்படப் பாடலாக என்று அது பல உருவம் பெறுகிறது. கவிதைகளின் நீட்சிதான் பாடல். கூடவே இசையும் சேரும்போது அது கவி விருந்தாக, இசை அமுதமாக மாறுகிறது. கவிதையும் இசையும் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் ஆகும்.
பல நல்ல விஷயங்கள் கவிஞர்களின் பார்வையில் வெளிப்படுத்தும் கவிதை நடை நமக்கு அற்புதத்தையும் ஆனந்த உணர்வையும் தரும். படைப்பு என்பது இறைவனுக்கு மட்டும் உரியது அல்ல.. நல்ல கவிஞர்களின் சிந்தனைகள் தான் இந்த கவிதைகள். சாதாராண விஷயங்களும் ஒர் கவிஞனின் பார்வையில் வேறு விதமாக தெரியும்.. நம்மை சுற்றி நடக்கும் விஷயங்கள் இதில் அடங்கும்.
ஒரு நல்ல கவிஞனாக வேண்டும் என்றால் முதலில் ஒரு நல்ல ரசிகராக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நல்ல உணர்வுகளை வெளிப்படுத்த முடியும். பக்திக் கவிதைகள், இயற்கக் கவிதைகள், ஆன்மீகக் கவிதைகள், காதல் கவிதைகள், தேச பக்திக் கவிதைகள் என பல வகையான கவிதைகள் இருக்கின்றன. சங்க காலத்திலும் கவிதைகள் இருந்தன.. இன்றும் அவை வேரூண்றிக் கிடக்கின்றன.
கவிதைகள் படிக்கும் பொழுதும் சரி, படைக்கும்போதும் சரி, மனதிற்கு இனம் புரியாத உணர்வினையும் நல்ல பாசிட்டிவான எனர்ஜியையும் அது வழங்குகிறது. அதனால் தான் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடம் கவிதை போட்டிகள் நடத்தப்படுகிறது. கவிதைகள், ஒருவரது படைப்பாற்றலை, கற்பனைத் திறமையை வளர்க்க, மேம்படுத்த உதவுகிறது. மனம் லேசாக உதவுகிறது. நமது திறமையை வெளிப்படுத்தவும் உதவுகிறது.
கடல் உள்ளவரை.. காதல் உள்ளவரை.. கற்பனை உள்ளவரை.. கவிதைகளுக்கும் ஓய்வில்லை.. கவி அலைகளும் ஓய்வதில்லை!
கட்டுரை: சுஜித்ரா
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
{{comments.comment}}