குழந்தை கிறுக்கிக் கொண்டே இருக்கிறது.. கவலை வேண்டாம்.. நீங்க என்ன சொல்றீங்க? புரியலையே?!

Mar 27, 2026,03:28 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed


தனது குழந்தை கிறுக்கிக் கொண்டே இருக்கிறது என கவலை வேண்டாம். என்ன சொல்றீங்க?  புரியவில்லையே?


இதோ அதற்கான விளக்கம் வருகிறது .


தேசிய Scribble தினம் மார்ச் 27 அன்று கொண்டாடப்படுகிறது. இது சுதந்திரமாக வரைதலை ஊக்குவிக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது.


Scribble என்பது சிந்தனையின் முதல் படியாகும். யாரும் பயமின்றி வரைய முடிகிறது. இதில் எந்த விதிமுறைகளும் விதிப்பதில்லை. இதனால் குழந்தைகள் மிகவும் விரும்பும் நாளாக கொண்டாடப்படுகிறது.


Scribble கற்பனை திறனை வளர்ப்பதோடு மன அழுத்தத்தை குறைக்கவும்  உதவுகிறது. இது ஒரு சுய வெளிப்பாட்டு முறையாக காணப்படுகிறது.


Scribble" என்ற ஆங்கில வார்த்தைக்குத் தமிழில் கிறுக்கல், அலட்சியமாக எழுதுதல், அல்லது தெளிவற்ற கையெழுத்து என்று பொருள் ஆகும். இது பொதுவாகப் புரியாத வகையில் அல்லது மிக வேகமாகக் கிறுக்கி எழுதுவதைக் குறிக்கிறது.




(Scribble/Doodle)  என்பது ஒரு பொருளின் மீது புரியாதபடி வரைவதாகும். அலட்சியமாக எழுதுதல், கவனமில்லாமல் வேகமாக எழுதுதல், தெளிவற்ற கையெழுத்து (Bad Handwriting) மற்றும் வாசிக்க முடியாத எழுத்து வடிவமமாக காணப்படுகிறது.


பல கலைஞர்கள் Scribble மூலம் புதிய யோசனைகளை உருவாக்குகிறார்கள். Scribble அழகான கலைப்படைப்பாக காணப்படுகிறது.  இதனை அனைவரும் எங்கே வேண்டுமானாலும் Scribble செய்து பார்க்கலாம். மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தருவதற்காக பள்ளிகளில் மாணவர்கள் Scribble செய்ய ஊக்குவிக்கப் படுகிறார்கள். இது குழந்தைகளின் கை இயக்க திறனை மேம்படுத்துகிறது.


Scribble தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. பேனா, பென்சில், நிறங்கள் அனைத்தாலும் செய்து பார்க்க முடிகிறது. 

சரி, தவறு என்ற கருத்தே இந்த கலையில்  கிடையாது. இது சிந்தனை திறனை வளர்க்கவும், Scribble செய்வது எளிதாகவும், சுவாரஸ்யமாகவும் காணப்படுகிறது.


இது மனதை சுதந்திரமாக சிந்திக்க வைப்பத்தோடு  பெரியவர்களும் இதை ரசிக்கும் வகையில் அமைகிறது. 


இது விளையாட்டுத் தனமான செயலாகவும், Scribble உணர்வுகளையும், கலைகளையும் இணைக்க உதவுகிறது. 

எளிய முறையில் படைப்பாற்றலை உருவாக்க முடிகிறது.


இன்றைய நாளில் Scribble செய்து கலை சுதந்திரத்தை உருவாக்கி பார்ப்போம். 


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தனித் தீர்மானம்.. விவாதத்திற்குப் பின் நிறைவேறியது

news

பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படாதது பெரும் ஏமாற்றம்: பாமக சௌமியா அன்புமணி பேச்சு!

news

கடன் வரம்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!

news

தமிழகத்தில் ஆகஸ்ட் 17 வரை மழைக்கு வாய்ப்பு...சென்னையிலும் மழை தொடரும்

news

நாளை ஆடி அமாவாசை நாளில் வரும் சூரிய கிரகணம் 2026 ஆகஸ்ட்...இதன் முக்கியத்துவம்

news

LPG கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் கவனத்திற்கு: e-KYC சரிபார்ப்பு ஆகஸ்ட் 15 வரை அவகாசம்

news

அபுதாபி செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இலவச நுழைவு விசா

news

Seenu Ramasamy comments: பட்ஜெட் பற்றிப் பேசுங்கள்.. வாசித்தவரைப் பற்றிய விவாதம் டைம் வேஸ்ட்!

news

அருணின் மாற்றம்.. திருக்குறள் கதை!

அதிகம் பார்க்கும் செய்திகள்