சென்னை: தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ம் தேதி திங்கட்கிழமை அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதற்கு முந்தைய நாட்களான அக்டோபர் 18 மற்றும் 19 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருவதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இந்நிலையில், பண்டிகைக்கு அடுத்த நாளான அக்டோபர் 21ம் தேதி செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 21ம் தேதி பொதுவிடுமுறையாக அறிவித்தது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்: இந்த ஆண்டு 20ம் தேதியன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள். அரசுஅலுவலர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு அக்டோபர் 21 செவ்வாய்கிழமை ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும். அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் அக்டோபர் 25 சனிக்கிழமை பணி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், நாளை (அக்டோபர் 25) தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 21ம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவித்திருந்தது. அதனை ஈடு செய்யும் விதமாக, அக்டோபர் 25ம் தேதி நாளை வேலைநாளாக செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி,மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்களில் நாளை பள்ளிகள் செயல்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}